மாஜி அமைச்சரின் பெண் வீக்னஸ் : சிக்க வைக்க திட்டம் போடும் ஓபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான தகறாரில் மாஜி அமைச்சர் ஒருவரின் குடுமி சிக்கியுள்ளது. அவரை சிக்க வைக்க திட்டம் தீட்டுகிறது ஓபிஎஸ் அணி.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jul 6, 2022, 06:34 PM IST
  • மாஜி அமைச்சரை சிக்க வைக்க திட்டம்
  • போக்ஸோ சட்டத்தில் கைதாவாரா மாஜி?
  • இந்த திட்டத்தால் பலன் அடையப் போவது யார்!
மாஜி அமைச்சரின் பெண் வீக்னஸ் :  சிக்க வைக்க திட்டம் போடும் ஓபிஎஸ் title=

அதிமுகவிற்குள் அடிதடி மட்டும்தான் இன்னும் நடக்கவில்லை. மற்ற எல்லாமே கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்தேறி வருகிறது. அவருக்கு இவர் கடிதம் எழுத, இவருக்கு அவர் கடிதம் எழுத, மாற்றி மாற்றி ஊடகங்களில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ள, இப்படியாக நாட்கள் கழிகின்றன.

11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி பொது செயலாளர் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என்பதில் முடிவாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த பொதுக்குழுவை நடக்க விடாமல் செய்ய தேவையான அனைத்து காரியங்களையும் செய்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த நிலையில்தான் உள்ளடியில் நடைபெற்று வரும் மற்றொரு விவகாரம் வெளியே கசிந்துள்ளது.

மேலும் படிக்க | OPS vs EPS : போருக்கு தயாரான ஓபிஎஸ் : சொந்த கட்சி ஊழல் விவரங்களையே வெளியிட போகிறார்

மாஜி அமைச்சர் ஒருவரின் ஆடியோ சில வருடங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஒரு இளம்பெண்ணின் தாயுடன் அமைச்சர் பேசுவது போன்று இருந்த ஆந்த ஆடியோவில், ’மெயின் ரோட்டுக்கு வந்துடுங்க’ என்று அந்த மாஜி அமைச்சர் பேசும் டயலாக் வெகு பிரசித்தம்.

உதவி கேட்டு வந்த பெண்ணை ஏமாற்றி மாஜி அமைச்சர் குழந்தையை கொடுத்துவிட்டதாகவும் அந்த குழந்தைக்கு தற்போது ஆதரவும் தேவை என்பதும்தான் அந்த போன் உரையாடலின் சாராம்சம். அந்த விவகாரத்தை தற்போது ஓபிஎஸ் அணியினர் கையில் எடுத்துள்ளதாக முன்னணி வார இதழ் ஒன்று கட்டுரை எழுதியுள்ளது.

மேலும் படிக்க | Kangana Ranaut : கங்கனா கூட வேலை செஞ்சதுதான் என்னோட பெரிய தவறு : கொதித்த இயக்குநர்

மாஜி அமைச்சரை பெண் விவகாரத்தில் சிக்க வைத்தால் எடப்பாடி ஆதரவாளர்கள் மொத்தமாக கலகலத்து போய்விடுவார்கள் என்பது ஓ. பன்னீர்செல்வத்தின் திட்டம். இதற்காக தமிழ்நாடு முழுக்க தேடி அலைந்து அந்த ஏமாந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து விட்டதாம் ஓபிஎஸ் டீம். அவரிடம் ஒரு விடியோவையும் வாங்கிவைத்து மாஜியிடம் டீல் பேசுவதாக தகவல்கள் வருகிறது.

வரும் செய்திகளை உறுதி செய்யும் விதமாக இன்று காலை பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், அந்த மாஜி அமைச்சர் போக்ஸோ சட்டத்தில் கைதாக வேண்டியவர் என்று பேசியிருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது அந்த மாஜி அமைச்சரின் குடுமி ஓ. பன்னீர்செல்வத்தின் கையில் இருக்கிறது. கோடநாடு வழக்கு ஒருபுறம், மாஜி அமைச்சர் மீதான போக்ஸோ ஒருபுறம் என ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சவால் விட்டு வருகிறார்கள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News