தமிழக அரசுக்கு வேண்டுக்கோள் விடுத்த மு.க ஸ்டாலின்

Last Updated : Oct 24, 2017, 01:24 PM IST
தமிழக அரசுக்கு வேண்டுக்கோள் விடுத்த மு.க ஸ்டாலின் title=

தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியால், தமிழ்நாட்டில் நிர்வாகம் மட்டுமல்ல சட்டம்-ஒழுங்கும் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு, நேற்று நடந்த இரண்டு நிகழ்வுகள் எடுத்துக்காட்டாக உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதைக்குறித்து அவர் கூறியதாவது:-

முதலில் நெல்லையில் உள்ள கடையநல்லூர் பகுதியை சார்ந்தவர்கள் கந்துவட்டி கொடுமையில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அந்த காணொளியை தொலைக்காட்சிகளில் காண்போர் அனைவருக்கும் இதயம் பதைப்பதைக்கும். இந்தக் கொடுமைக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவது நிகழ்வாக சென்னை காசிமேட்டில், அறவழியில் மீனவர்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது. ஜனநாயக முறையில் போராடிய மீனவ சமுதாயத்தினை சேர்ந்த பெரியோர்களையும், தாய்மார்களையும் காவல்துறையை விட்டு கொடூரமாக தடியடி நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். மீனவர்களுக்கு உரிய பரிகாரம் செய்ய இந்த அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Trending News