Dindigul: கணவருடன் சேர்த்து வைக்கவும்: எஸ்.பி அலுவலகம் முன்பு இளம்பெண் தர்ணா

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகம் முன்பு இளம்பெண் தர்ணா

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 11:06 AM IST
  • திண்டுக்கல் எஸ்.பி அலுவலகம் முன்பு இளம்பெண் தர்ணா
  • குடும்பத்துடன் இளம்பெண் நீதிகேட்டு போராட்டம்
  • கணவருடன் சேர்த்து வைக்க கோரிக்கை
Dindigul: கணவருடன் சேர்த்து வைக்கவும்: எஸ்.பி அலுவலகம் முன்பு இளம்பெண் தர்ணா title=

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகம் முன்பு இளம்பெண் தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி அந்தப் பெண் மறியலில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் கவுசல்யா. 22 வயதான இவரும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கண்ணனூரைச் சேர்ந்த மகுடீஸ்வரன் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்தவர்கள்.

இருவரும் ஒன்றாக திண்டுக்கல்லில் உள்ள தொழில் பயிற்சிப் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோது இருவரும் காதலித்துள்ளனர். பின்னர் இருவரும் வேலை தேடி சென்னைக்கு சென்றனர்.

அங்கு, சோழிங்கநல்லூரில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும், தங்களுடைய குடும்பத்தினருக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துக் கொண்டனர். இருவரும் தங்கள் திருமண செய்தியையும் குடும்பத்தினருக்கு சொல்லாமலேயே ஒன்றாக வாழ்ந்துவந்தனர்.

ALSO READ | சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா: ஓமிக்ரான் தொற்றா?

கவுசல்யா கர்ப்பமானது மகுடீஸ்வர்னுக்கு பிடிக்கவில்லை. வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துள்ள நிலையில் கர்ப்பமாக இருப்பது பிரச்சனையை கிளப்பும் என்று நினைத்துள்ளார் கணவர். 5 மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை, ஒட்டன்சத்திரத்திற்கு அழைத்து வந்து கருக்கலைப்பு செய்துள்ளார் மகுடீஸ்வரன்.

கொரோனா

அதன்பின், தற்பொழுது தனது ஜாதியை காரணம் காட்டி சேர்ந்து வாழ மறுத்து வருகிறார் என்று கவுசல்யா புகார் கூறுகிறார். தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கெளசல்யா இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தர்ணாவில், கவுசல்யாவின் பெற்றோரும் கலந்துக் கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முன் குடும்பமாக அமர்ந்து தர்ணா செய்த கவுசல்யாவை அங்கிருந்த காவல்துறையினர் சமாதானம் செய்தனர். இதனையடுத்து கௌசல்யா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் புகார் அளித்த கவுசல்யா, தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ALSO READ | விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி : பஸ்ஸை கொளுத்திய மக்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News