ஓபிஎஸ்-க்கு கொலை மிரட்டல் விடுத்த எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

Last Updated : Feb 13, 2017, 11:25 AM IST
ஓபிஎஸ்-க்கு கொலை மிரட்டல் விடுத்த எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு title=

தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் 'கையை வெட்டுவேன்' என மிரட்டல் விடுத்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., கலைராஜன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போயஸ் கார்டன் முன் கூடியுள்ள சசிகலா அணியினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முதல்வர் ஓ.பி.எஸ்சை விமர்சித்து ஊடகங்களிடம் தொடர்ந்து பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களிடம் பேசிய தி.நகர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கலைராஜன் முதல்வர் ஓ.பி.எஸ்சின் கையை வெட்டுவேன்’ என மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட் வழக்கறிஞரான செல்லப் பாண்டி தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த கலைராஜன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு செய்திருந்தார். நேற்று கலைராஜன் மீதான குற்றச்சாட்டு குறித்து காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டன் வளாகத்தில் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் மீது கொலை மிரட்டல் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

Trending News