Cyclone Mandous Live: மாண்டஸ் புயல் அலெர்ட் - மக்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்கள் என்ன?

Cyclone Mandous Live Updates:  மாண்டஸ் புயல் கரையை கடக்கவிருக்கும் சூழலில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 9, 2022, 08:52 AM IST
  • மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடக்கிறது
  • தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது
  • பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது
Cyclone Mandous Live: மாண்டஸ் புயல் அலெர்ட் - மக்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்கள் என்ன? title=

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயலானது இன்று நள்ளிரவு கரையை கடக்கவிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்துவாங்குகிறது. எனவே சாலைகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்திருக்கிறது. பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கனமழையால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து உயர் அலுவலர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து பொதுமக்களுகு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுமக்களுக்கு, “மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். கடற்கரைக்கு செல்வதை தவிர்த்து, காற்று வீசும்போது மரத்தின் அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர் நிலைகளின் அருகிலும், திறந்த வெளியிலும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | மாண்டஸ் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை; தலைமைச் செயலாளரின் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Cyclone Mandous Live: மிரட்டும் மாண்டஸ் புயல்: 24 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று லீவ் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News