நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - IMD

நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது!

Last Updated : Dec 4, 2020, 10:18 AM IST
நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - IMD title=

நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதால், தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது!

வங்கக் கடலில் உருவான புரெவி புயல் (Cyclone Burevi) இலங்கையின் திருகோணமலை வழியே கரையை கடந்து, இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ராமநாதபுரத்திலிருந்து (Rameswaram) 40 கிலோ மீட்டர் தொலைவிலும், பாம்பனிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு (Regional Meteorological Centre) மையம் கணித்துள்ளது. 

ALSO READ | இன்று கரையை கடக்கும் ‘புரெவி’; 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

மேலும், 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, ராமநாதபுரம், தூத்துக்குடி இடையே அடுத்த 6 மணி நேரத்துக்குள் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் (IMD) கூறியுள்ளது. அப்போது மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் அது தாழ்வுமண்டலமாக வலு குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, ‘புரெவி’ புயல் கேரளாவில் (Kerala) இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் (pinarayi vijayan) நேற்று நடத்தினார். 

‘புரெவி’ புயல் கேரளாவில் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை (RainUpdate) பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த எட்டு குழுவினர் கேரளா சென்றடைந்தனர்.

ALSO READ | பாம்பனுக்கு அருகே புரெவி புயல்: முழு மூச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பேரிடர் மீட்பு குழுவினர் கடல் மற்றும் மலைப்பகுதிகளை பார்வையிட்டனர். மாநில அரசு 217 நிவாரண முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 16 ஆயிரம் பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அசாதாரண சூழ்நிலைகளை சமாளிக்க கோவை சூலுாரில் உள்ள விமான படை தளத்தில் விமானப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News