காங்கிரஸ் எம்.பி. ஹெச் வசந்த குமார் காலமானார்: COVID-19-ஆல் பாதிக்கப்பட்டிருந்தார்!!

தமிழகத்தின் கன்யாகுமரி காங்கிரஸ் எம்.பி. எச். வசந்தகுமார் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலமானார் என சென்னை மருத்துவமனை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 28, 2020, 10:34 PM IST
  • 70 வயதான வசந்த குமார் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆபத்தான நிலையில் இருந்தார்.
  • கோவிட் -19 நோயால் இறந்த இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார்.
காங்கிரஸ் எம்.பி. ஹெச் வசந்த குமார் காலமானார்: COVID-19-ஆல் பாதிக்கப்பட்டிருந்தார்!! title=

சென்னை: தமிழகத்தின் கன்யாகுமரி காங்கிரஸ் எம்.பி. எச். வசந்தகுமார் (H Vasanthakumar) அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலமானார் என சென்னை மருத்துவமனை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

70 வயதான வசந்த குமார் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆபத்தான நிலையில் இருந்தார். மேலும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எம்.பி. எச்.வசந்தகுமாரும் நங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் மாநில காங்கிரஸ் குழுவின் செயல் தலைவராக இருந்தார்.

நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபகரணங்கள் கடைகளின் சங்கிலியான வசந்த் அண்ட் கோ மற்றும் பொழுதுபோக்கு செயற்கைக்கோள் சேனலான வசந்த் டிவியையும் அவர் நிறுவினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "அவர் ஒரு சிறந்த போராளி, உறுதியான காங்கிரஸ்காரர், எம்.பி. மற்றும் டி.என்.சி.சி யின் செயல் தலைவர். அவரது மறைவால் மிகுந்த துயரடைந்துள்ளோம்” என கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்வீட் மூலம் வசந்தகுமாரின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.

பிரதமரும் வசந்தகுமாரின் மரணத்திற்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 நோயால் இறந்த இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார். முன்னதாக, திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தார். 

Trending News