தொடரும் இலங்கையின் அத்துமீறல்... மீனவர்கள் மாநாட்டில் முதல்வர் - பிளான் என்ன?

CM Stalin Fishermen Confernce: இராமநாதபுரத்தில் வரும் ஆக. 18ஆம்‌ தேதி நடைபெற உள்ள மீனவர்‌ சங்கங்களின்‌ மாநில மாநாட்டில்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 25, 2023, 12:47 PM IST
  • ஸ்டாலின் கலந்துகொள்வது குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்.
  • மீனவர்களின்‌ வாழ்வாதார பிரச்சனைகள்‌ தொடர்பாக இந்த மாநாடு நடக்கிறது.
  • இன்று 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தொடரும் இலங்கையின் அத்துமீறல்... மீனவர்கள் மாநாட்டில் முதல்வர் - பிளான் என்ன? title=

CM Stalin Fishermen Confernce: தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த இராமநாதபுரம்‌ மாவட்டம்‌, மண்டபம்‌ பகுதியைச்‌ சேர்ந்த 9 மீனவர்கள்‌ நெடுந்தீவு பகுதியில்‌ இலங்கை கடற்படையினரால்‌ இன்று (ஜூலை 25) கைது செய்யப்பட்டுள்ளனர்‌. இலங்கை கடற்படையினரால்‌ தமிழ்நாட்டு மீனவர்கள்‌ கைது செய்யப்படுவதும்‌, தாக்கப்படுவதும்‌, அவர்களது படகுகள்‌ பறிமுதல்‌ செய்யப்படுவதும்‌ வாடிக்கையாகிவிட்டது. 

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின், இந்தியப்‌ பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய வெளியுறவுத்‌ துறை அமைச்சருக்கும் தொடர்ந்து கடிதம்‌ மூலமாகவும்‌, தொலைபேசி வாயிலாகவும்‌ உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார்‌. இருந்தபோதிலும்‌ இதுபோன்ற சம்பவங்கள்‌ தொடர்ச்சியாக நடக்கிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர்‌‌, கடந்த ஜூலை 20ஆம் தேதி  அன்று பிரமத்ர மோடிக்கு எழுதிய கடிதத்தில்‌, இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபரிடம்‌, இந்திய மீனவர்களின்‌ பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடவும்‌, தமிழக மீனவர்கள்‌ இலங்கை கடற்படையினரால்‌ அடிக்கடி தாக்கப்படுவதும்‌ குறித்தும்‌ கைது செய்யப்படுவது குறித்தும்‌, இலங்கையில்‌ வாழும்‌ தமிழ்‌ மக்களின்‌ கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களது உரிமைகள்‌ மற்றும்‌ சுதந்திரம்‌ பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது குறித்தும்‌ இலங்கை அதிபரை வலியுறுத்திட கேட்டுக்கொண்டார்‌.

மேலும் படிக்க | ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு! எச்சரிக்கை!

மேலும்‌, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள்‌ சந்தித்து வரும்‌ பிரச்சனைகள்‌ குறித்து இந்தியாவிற்கு வருகை தந்த
இலங்கை அதிபரிடம்‌ பேச வேண்டும்‌ என்றும்‌ கோரிக்கை விடுத்திருந்தனர்‌.

இந்நிலையில்‌, மீனவர்களின்‌ வாழ்வாதார பிரச்சனைகள்‌ தொடர்பாக தமிழ்நாட்டின்‌ அனைத்து மீனவர்‌ சங்கங்கள்‌ ஒன்றிணைந்து, தமிழ்நாடு மீனவர்கள்‌ தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள்‌ பறிமுதல்‌ செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும்‌, அதனை
தடுத்திட கோரியும்‌, மேலும்‌ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்‌ இராமநாதபுரத்தில்‌ ஆக.18 ஆம்‌ தேதி மாநில மாநாடு நடத்த உள்ளது.

இம்மாநில மாநாட்டில்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌‌ கலந்துகொள்ள வேண்டும்‌ என்று மீனவர்‌ சங்கங்களின்‌ பிரதிநிதிகள்‌ அழைப்பு விடுத்தனர்‌. அவர்களின்‌ அழைப்பினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஆக.‌ 18ஆம்‌ தேதி இராமநாதபுரத்தில்‌ நடைபெற உள்ள மீனவர்‌ சங்கங்களின்‌ மாநில மாநாட்டில்‌ கலந்து கொள்ள இசைவு
தெரிவித்துள்ளார்‌ என்று மீன்வளம்‌ - மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்‌ துறை அமைச்சர்‌ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்‌. முதலமைச்சர் இந்த மாநாட்டில் பங்கேற்பது அரசியல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

மேலும் படிக்க | அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை... நெல்லையில் பரபரப்பு - தீவிரம் காட்டும் காவல்துறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News