காதலிக்கு செலவு செய்த பணத்தை மீட்டுக்கொடுங்கள் -சென்னை காதலன்!

தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக் கூறி, அவருக்குச் செலவு செய்த பணத்தை திருப்பி வாங்கித் கொடுக்குமாறு சென்னை இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Sep 3, 2019, 01:05 PM IST
காதலிக்கு செலவு செய்த பணத்தை மீட்டுக்கொடுங்கள் -சென்னை காதலன்! title=

தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக் கூறி, அவருக்குச் செலவு செய்த பணத்தை திருப்பி வாங்கித் கொடுக்குமாறு சென்னை இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் விக்கி. மெக்கானிக்காக வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று மதுரவாயல் காவல் நிலையத்திற்கு மதுபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது காவல்துறை அதிகாரியிடம், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண்ணுன் தன்னை காதலித்ததாகவும், தற்போது அந்தப் பெண் திடீரென தன்னைக் காதலிக்க மறுப்பதாகவும் தெரிவித்துப் புலம்பியுள்ளார். அதைத்தொடர்ந்து, பிளேடால் கைகளை வெட்டிக்கொண்டு பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவே நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளார்.

இதைத் தடுத்த காவல்தைற அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் தான் காதலித்த பெண்ணுக்கு 3,000 ரூபாய் செலவு செய்ததாகவும், அந்தத் தொகையை அவரிடமிருந்து வாங்கித்தர வேண்டும் எனவும் வேண்டியுள்ளார்.

பின்னர், காவலர்கள் கேட்டுக்கொண்டதால் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். காதலிக்குச் செலவு செய்த பணத்தை திரும்பக் கேட்ட காதலலின் இந்தச் செயல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News