முதலமைச்சர் எழுதிக்கொடுப்பதை பேசுகிறார்... இது அழகல்ல - அண்ணாமலை

அண்ணாமலை மாநிலம் முழுவதும் மேற்கொள்ள உள்ள நடைபயணத்தை நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 27, 2023, 05:28 PM IST
  • 164 நாட்களில் 234 தொகுதிகள் செல்கிறோம் - அண்ணாமலை
  • திமுக ஆட்சியில் மூன்று மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்று உள்ளது - அண்ணாமலை
  • என்எல்சி நிலம் கையகப்படுத்துவது பிரச்சனை தீர்வு காணப்பட வேண்டும் - அண்ணாமலை
முதலமைச்சர் எழுதிக்கொடுப்பதை பேசுகிறார்... இது அழகல்ல - அண்ணாமலை title=

மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளரை சந்தித்தார். அதில் அவர் பேசியதாவது, "ராமேஸ்வரத்தில் 'என் மண், என் மக்கள்' நடைபயணம் தொடங்க உள்ளது. தொடக்க விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். நடைபயணம் தொடங்கி 164 நாட்களில் 234 தொகுதிகள் செல்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ஜனவரி மாதத்தில் முடிக்க உள்ளோம்" என்றார்.  

தொடக்க விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் வருவார்களா என்ற கேள்விக்கு, "சில கட்சித்தலைவர் தொடக்க விழாவுக்கு வருகிறார்கள். சிலர் அவர்கள் சார்பாக வேறு தலைவர்களை அனுப்புகிறார்கள். 234 தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 164 நாட்களில் ஜனவரி 11ஆம் தேதிக்குள் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பொதுமக்களிடம் கொண்டு செல்வது நோக்கம். யாத்திரையின் இடையே 10 முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அந்தந்த மாநகரங்களில் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் மக்கள் பயன் பெற்றார்கள் என்ற அடிப்படையில் அந்த துறை அமைச்சர்களை கொண்டு கூட்டம் நடைபெறும். மாநாடு நடைபெறும் இடங்களில் ஒவ்வொரு மத்திய அமைச்சர்கள் பங்கேற்பார்கள். 

இராமேஸ்வரத்தில் நாளை (ஜூலை 28) மாலை தொடக்க விழா நடக்கிறது, யாத்திரை நாளை மறுநாள் (ஜூலை 29) மாலை தொடங்குகிறது. புள்ளி விவரத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி செய்தது குறித்து பேச உள்ளோம். ஜூலை 29ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் சட்டமன்ற தொகுதியாக அந்த யாத்திரை தொடங்கப்பட உள்ளது" என்றார். 

NLC குறித்த கேள்விக்கு அவர், "என்எல்சி பகுதியில் விளைநிலங்களில் புல்டோசர் வைத்து சேதப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது. என்எல்சி பொது மேலாளர் இடம் தொடர்புகொண்டு பேசியதில் நில ஆர்ஜித திட்டத்தின் கீழ் நிலங்களை கையகப்படுத்த சென்றுள்ளார்கள். நிலம் வழங்கியவர்களுக்கு வேலை, பயிர் சேதமடைந்தால் இழப்பீடு என கோரிக்கை வைத்துள்ளோம்" என பதிலளித்தார். 

ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்து இரண்டாவது ஊழல் பட்டியல் வழங்கியது குறித்த கேள்விக்கு, "மூன்று மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்று உள்ளது. விடியல் மெடிக்கல் போன்றவற்றின் மூலம் ஆறு அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இடிஎல் திட்டம் 2004இல் ஆரம்பிக்கப்பட்ட போது 100% அரசு பங்கும் தற்போது ஜீரோ புள்ளி ஐந்து சதவீதம் உள்ளது ஆறு அமைச்சர்கள் அவர்களது பினாமிகள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் லோக் ஆயுக்தா உள்ளது. ஆனால், அலுவலர்கள் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை என்ற அமைப்பு உள்ளது. ஆனால் செயல்படுவதில்லை" என்றார். 

மேலும் படிக்க | எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாபம் - பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலியுறுத்தல்

முதல்வரின் யானை பலம் பேச்சுக்கு, முதலமைச்சர் எழுதிக்கொடுத்து அதை பேசுகிறார். அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டின்போது 41 கோடி ரூபாய் அன்னிய முதலீடு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் விளக்கம் அளிப்பாரா? 41 கோடி அந்நிய முதலீட்டில் செல் கம்பெனி உருவாக்கப்பட்ட முறைகேடு நடைபெற்றுள்ளது

என்எல்சி நிலம் கையகப்படுத்துவது பிரச்சனை தீர்வு காணப்பட வேண்டும். அங்குள்ளவர்களுக்கு வேலை மற்றும் இழப்பீடு ஆகியவை வழங்க வருவாய் துறை மற்றும் என்எல்சி நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கி 14,000 பேருக்கு வேலை வழங்க வேண்டும். திருவாரூர் சேந்திரிய பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு?, "கே.வி பள்ளி உள்ள பகுதிகளில் சுற்று வட்டார வழக்கத்திற்கு ஏற்ப மொழிகள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்திற்கு  கடிதம் எழுதுகிறேன்" என்றார். 

மேலும் பேசிய அவர், "மணிப்பூரில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு நிலை வேறு. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏழு மாநிலங்களில் நாம் எந்த திட்டமும் செயல்படுத்த முடியாது. ராணுவமே ரோடு போட அங்குள்ள குழுக்களுக்கு பணம் அளித்து அதன் பின் தான் சாலை அமைக்க முடியும் பேச்சுவார்த்தை முடித்து தான் அங்கு செல்ல முடியும். ஆயுதப்படை சிறப்பு சட்டங்கள் முன்பு இருந்தது தற்போது அந்த மாநில உரிமைக்காக ஆயுதப்படை சிறப்பு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. கலவரம் குறித்து உள்துறை மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது" என்றார். 

மேலும் படிக்க | ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News