நில மோசடி வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர்! விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

கரூரில் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 17, 2024, 10:34 AM IST
  • போலி சான்றிதழ் கொடுத்து மோசடி.
  • முன்ஜாமீன் கோரிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
  • வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்.
நில மோசடி வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர்! விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்! title=

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா தான செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக கடந்த ஏப்ரல் 6-ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அவருடன் ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் ஆகிய 4 பேர் சென்றுள்ளனர். சொத்து வெள்ளியணை சார்பதிவகத்தின் எல்லைக்குட்பட்டது என்பதாலும், சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாததாலும் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | இந்தியா கூட்டணியின் 41வது வெற்றி! திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் வெற்றி முழக்கம்!

இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தானும் கைது செய்யப்படலாம் என நினைத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு கடந்த ஜூன் 12-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, அசல் ஆவணம் தொலைந்துவிட்டது எனக்கூறி சென்னை, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சி.எஸ்.ஆர் நகலை ஆவணதாரர் சார்பாக யுவராஜ் மற்றும் பிரவீன் ஆகியோர் அளித்தனர். வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிப்பறிக்கை பெற்று கடந்த மே 10-ம் தேதி மேற்படி சொத்து சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது. மறுநாள் ஷோபனாவின் தந்தை பிரகாஷ், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் பிரகாஷ், கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த புகாரையடுத்து சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தொழிலாளர்களை பாதுகாப்பு பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு ரூ. 5000 அபராதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News