பிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது!

பிரபல சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 13, 2018, 01:52 PM IST
பிரபல நடிகைக்கு பாலியல் அழைப்பு: 2 பேர் கைது! title=

பிரபல சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேபாளி படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் தேவையில்லாத தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. நீங்கள் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்களா? உங்களோடு வருவதற்கு வி.ஐ.பி.க்கள் காத்திருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்களை அனுப்பி பாலியலுக்கு அழைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் அளித்தார். செல்போனில் தேவை இல்லாத அழைப்புகளை விடுத்து தொல்லை கொடுக்கும் நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். 

இதனை தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியத்தில்  விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் முருகப்பெருமான், கவியரசன் ஆகிய இருவரும் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Trending News