திருமண பத்திரிக்கை வைப்பதாக வந்து திட்டம் போட்டு திருடிய தம்பதி!

திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி கை, கால்களை கட்டி போட்டு பணம் நகைகளை சுருட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2021, 03:08 PM IST
திருமண பத்திரிக்கை வைப்பதாக வந்து திட்டம் போட்டு திருடிய தம்பதி! title=

தாம்பரம் : திருடர்களின் தில்லாலங்கடி வேலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. புது புது ப்ளான்களை போட்டு பூட்டை உடைக்கும் ஜெகஜால கில்லாடிகளாக மாறி வருகின்றனர்.  திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி கை, கால்களை கட்டி போட்டு பணம் நகைகளை சுருட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

சென்னையில் தாம்பரத்தை அடுத்த சேலையூர் என்ற பகுதியில் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி(43).  இவர் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுகுணா(37) இந்த தம்பதியருக்கு புஷ்பலதா(19) என்ற ஒரு மகள் இருக்கிறார்.  இவர்கள் இந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக வசித்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் பணிநிமித்தம் காரணமாக ரவி வெளியே சென்றுவிட்டார். இவரது மனைவி சுகுணாவும் மேடவாக்கத்திற்கு ஒரு வேலையாக சென்றுவிட்டார். அப்போது இவர்கள் மகள் புஷ்பலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.  இந்நிலையில் சரியாக மாலைப்பொழுதில் ஒரு தம்பதியர் இவர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். தாங்கள் உனது தந்தை ரவியின் உறவினர்கள் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர். மேலும் உறவினர்கள் போல நலம் விசாரித்துள்ளனர்.

ALSO READ ஓபிஎஸ் ஒரேபோடு.. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும்!

பத்திரிக்கை வைக்க தாம்பூலத் தட்டை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். இவர்களை உறவினர் என்று நம்பிய புஷ்பலதாவும் தாம்பூலத்தட்டு எடுக்க சமையல் அறைக்கு சென்றுள்ளார். சமையலறைக்குச் சென்று புஷ்பலதாவை பின்தொடர்ந்த அந்த கயவர்கள் உடனடியாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புஷ்பலதாவை மிரட்டினர்.  பின்னர் புஷ்பலதாவின் கைகளை கட்டிப் போட்டுவிட்டு சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியையும் வைத்து அமுக்கி விட்டு, வெளியில் எதுவும் கேட்க இயலாதவாறு, டிவியின் சத்தத்தையும் அதிகமாக வைத்துவிட்டு பீரோவில் இருந்த 7 பவுன் நகையையும், ஒரு லட்சத்து ஆயிரம் பணத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பியோடினர்.

இந்த சம்பவம் குறித்து புஷ்பலதா பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் அதிர்ந்து போய் சேலையூர் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.  உண்மையாகவே புஷ்பலதாவை கட்டிப்போட்டு கொள்ளயடித்தார்களா? மேலும் வந்த தம்பதியர் உண்மையான கணவன் மனைவிதானா? என்றவாறு பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ சென்னை மெட்ரோ ரயிலில் டோக்கனுக்கு பதில் டிக்கெட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News