நிலைகொள்ளாத போதை - காவலரை தாக்கிய இளைஞர்கள்

மது போதையில் தலைமை காவலரை தாக்கிய 4 இளைஞர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 17, 2022, 07:24 PM IST
  • மதுபோதையில் இளைஞர்கள் ரகளை
  • தலைமை காவலர் மீது தாக்குதல்
  • தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி தீவிரம்
 நிலைகொள்ளாத போதை -  காவலரை தாக்கிய இளைஞர்கள் title=

பலகை தொட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் செந்தில் குமார் என்பவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று  11மணி அளவில் தனது குடும்பத்தோடு வெளியே சென்று விட்டு தனது வீடு அருகே தனது காரை நிறுத்தும்போது குடிபோதையீல் வந்த 4இளைஞர்கள் தலைமை காவலரின் கார்மீது காலி மதுபாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்

இதனை காவலர் தட்டி கேட்டபோது அவரை கல்லால் தாக்கிவிட்டு அவர்கள் தப்போடியியுள்ளனர் இதில் காயமடைந்த செந்தில் குமார் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இது குறித்து திருவொற்றியூர் போலிசார் வழக்கு பதிவு செய்து காவலரை தாக்கிய நால்வரை தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | PM Narendra Modi Birthday: பிரதமருக்கும் எண் 8-க்கும் உள்ள சம்பந்தம் என்ன?

மேலும், காவல் துறையினர் மீது தொடரும் இதுபோன்ற தாக்குதல்களை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | 'ஸ்டாலின் ஒரு பொம்மை... மகன், மருமகன், மனைவிதான் எல்லாம்...' - செங்கல்பட்டில் சீறியெழுந்த இபிஎஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News