T20 World Cup: புள்ளி பட்டியலில் இந்தியா டாப்: அரையிறுதிக்கு செல்ல அந்த ஆட்டம் முக்கியம்

20 ஓவர் உலக கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிராக 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 27, 2022, 04:53 PM IST
  • இந்திய அணி 2வது வெற்றி
  • புள்ளி பட்டியலில் முதலிடம்
  • நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி
T20 World Cup: புள்ளி பட்டியலில் இந்தியா டாப்: அரையிறுதிக்கு செல்ல அந்த ஆட்டம் முக்கியம் title=

20 ஓவர் உலக கோப்பையில் இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கியது. சிட்னியில் மழைக்கு வாய்ப்பில்லை என்பதை தெரிந்து கொண்ட கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார். 

மீண்டும் சொதப்பிய கே.எல்.ராகுல் 

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்த கே.எல்.ராகுல் இந்த முறையும் எல்பிடபள்யூ என்ற முறையில் வெளியேறினார். இந்த விக்கெட் இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்பதை புரிந்து கொண்ட கேப்டன் ரோகித் சர்மா, கிங் கோலியுடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி 10 ஓவர் வரை மெதுவாக விளையாட, அதற்கு மேல் அதிரடி காட்டத் தொடங்கியது. 

மேலும் படிக்க | ICC T20 World Cup : சிட்னியில் மழை... இந்தியாவின் வெற்றி பயணம் தடைபடுமா...?

ரோகித் அரைசதம்

குறிப்பாக ரோகித் சர்மா அதிக பந்துகளை எதிர் கொண்டுவிட்டதால், அடித்து ஆட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இதனால், யார் போட வந்தாலும் அடிப்பதிலேயே குறியாக இருந்தார். ஒன்றிரண்டு ஷாட்டுகள் அவருக்கு வசமாகவில்லை என்றாலும் 39 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்சர்களும் அடங்கும். ரோகித் வெளியேறிய பிறகு இந்திய அணியின் ஆட்டம் இன்னும் அடுத்த லெவலுக்கு சென்றது.

கோலி - சூர்யகுமார் கூட்டணி 

களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், கோலியுடன் ஜோடி சேர்ந்து நெதர்லாந்து பந்துகளை அடித்து பறக்க விட்டார். இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ் என்ற பட்டபெயருக்கு ஏற்றார்போல் மைதானத்தின் அனைத்து பக்கங்களுக்கும் பந்துகளை அடித்து நெதர்லாந்து அணியினருக்கு தலைவலியாக மாறினார். மறுமுனையில் விராட் கோலி 44 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க, அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 20 ஓவர்களில் 179 ரன்கள் விளாசியது.

இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்

பேட்டிங்கில் சவாலான ஸ்கோரை நிர்ணயித்தது போலவே பந்துவீச்சிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இதனால் நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்துக்கு சென்றது. புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப், அக்சர், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போது புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். 

மேலும் படிக்க | ICC T20 World Cup: IND vs NED - இவருக்கு பதில் இவரா...? இங்கிலாந்து நிலைமையை தவிர்க்க இந்தியா இதை செய்யுமா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News