இந்தியா-இங்கிலாந்து முதல் 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது

Last Updated : Jan 26, 2017, 10:53 AM IST
இந்தியா-இங்கிலாந்து முதல் 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது title=

இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் 20 ஓவர் போட்டி கான்பூரில் இன்று நடக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. பிறகு நடைபெற்ற 3 ஒருநாள் தொடரையும் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நாளை இரு அணிகள் இடையே 20 ஓவர் போட்டி முதல் ஆட்டம் கான்பூரில் நடைபெறுகிறது. மொத்தம் மூன்று 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. டெஸ்ட் தொடரையும் மற்றும் ஒருநாள் தொடரையும் இழந்துள்ள நிலையில் 20 ஓவர் போட்டி தொடரையாவது வென்று விடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் போட்டி தொடரையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஓவரில் போட்டியில் தவான், கேதர் ஜாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இடம் பெறவில்லை. மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, பர்வேஷ், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெக்ரா, மன்தீப்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய கடைசி இரண்டு 20 ஓவர் போட்டியிலும் இங்கிலாந்துக்கு வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இந்தியா-இங்கிலாந்து இடையேயான 20 ஓவர் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்தியா வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன்), ராகுல், மனிஷ் பாண்டே, யுவராஜ்சிங், டோனி, ரெய்னா, ஹர்த்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், ஆசிஷ் நெக்ரா, பர்வேஷ், பும்ரா, மன்தீப்சிங், ரிஷப் பண்ட், யசுவேந்திரஷால்.

இங்கிலாந்து வீரர்கள்:

மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஹால்ஸ், ஜோரூட், மொய்ன்அலி, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் பில்லிங்ஸ், ஜேக்பால், டாசன், கிறிஸ் ஜோர்டான், புளுன்செட், மில்ஸ், ஆதில் ரஷீத், டேவிட் வில்லி.

Trending News