உலக பேட்மிண்டன் போட்டி: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த்

24_வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷி தொடரில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த். 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 1, 2018, 01:11 PM IST
உலக பேட்மிண்டன் போட்டி: 3வது சுற்றுக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த் title=

சீனாவின் நான்ஜின் நகரில் 24_வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் (6வது இடம்), தனது முதல் சுற்றில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த 87-ம் நிலை வீரர் ஹட் நுயேனை எதிர்க்கொண்டார். இந்த சுற்றில் 21-15, 21-16 என்ற செட்களில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார் ஸ்ரீகாந்த். இன்று தனது இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த் 21-15, 12-21, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மூன்றாவது சுற்றில் மலேசியாவை சேர்ந்த லியூ டாரனை எதிர்கொள்கிறார்.

 

அதபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடி வரும் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் சாய்னா நெவால் ஆகியோருக்கு முதல் சுற்றில் பை அளிக்கப்பட்டதால், நேற்று இரண்டாவது சுற்றில் விளையாடினார் சாய்னா நெவால். உலக தரவரிசையில் 10_வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால், துருக்கி சேர்ந்த 72-ம் நிலையில் இருக்கும் அலியே டெமிர்பாக்கை எதிர்க்கொண்டார். இந்த சுற்றில் 21-17, 21-8 என்ற செட்களில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார் சாய்னா நேவால். மூன்றாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.

 

அதேபோல மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தனது இரண்டாவது சுற்றில் இந்தோனேசியாவை சேர்ந்த பிட்ரியானியை எதிர்கொள்கிறார்.

Trending News