இன்னும் 24 மணி நேரம்..சனியால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

Shani Gochar 2023: ஜோதிடத்தின்படி, சனிபகவானின் பத்தாம் இடத்துப் பார்வை சில ராசிகளில் ஆரம்பித்துவிட்டது. இதன் போது 3 ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பும், முன்னேற்றமும் உண்டாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 9, 2023, 02:26 PM IST
  • சனியின் பார்வையால் எந்த ராசிகளுக்கு என்ன பலன்.
  • இந்த நேரம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும்.
  • இந்த காலத்தில் நிம்மதி கைக்கூடும்.
இன்னும் 24 மணி நேரம்..சனியால் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் title=

கும்பத்தில் சனி கிரக பெயர்ச்சி: சனி பெயர்ச்சி, சனி அஸ்தமனம், சனி பகவான் உதயம் போன்றவை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சனிபகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியானார். இதன் போது, ​​சனி தனது பத்தாம் பார்வையை விருச்சிக ராசியின் மீது திருப்புகிறார். அதே நேரத்தில், சுக்கிரன் தனது ஏழாம் பார்வையை விருச்சிக ராசியில் வைத்துள்ளார். இதன் போது, ​​ஷஷ மற்றும் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

ஜோதிடத்தின் படி, விருச்சிகம் ராசியை செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் மூன்று ராசிக்காரர்களுக்கு சனியின் பத்தாம் பார்வையால் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றன. இதன் போது தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த மூன்று ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | இந்த மாதம் குரு பெயர்ச்சியால் உருவாகும் சண்டாலயோகம்..! 4 ராசிகளுக்கு 7 மாதங்களுக்கு ஆபத்து

ரிஷபம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் பத்தாம் பார்வை சாதகமாக இருக்கும். ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிரன் லக்ன வீட்டில் பெயர்ச்சியாகி உள்ளார். அதே நேரத்தில், அவரது ஏழாம் பார்வை இந்த ராசிகளின் திருமண வாழ்க்கையை பாதிக்கும். அதே நேரத்தில், சனி பகவான் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் கர்ம வீட்டில் சஞ்சரிக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் ஏழாவது வீட்டில் தான் பார்வையை வைக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும்.

இந்த நேரத்தில் நீங்கள் வணிக ஒப்பந்தங்களை செய்துக் கொள்ளாலாம். சனியும் இங்கு நநவபஞ்சம் ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த நேரத்தில் நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். இதனுடன் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

கும்பம்

இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் பத்தாம் பார்வை சாதகமாக அமையப் போகிறது. சனி பகவான் தனது ஜாதகத்தில் ஷஷ, கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். மறுபுறம், சுக்கிரனின் பெயர்ச்சியால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. சனி மற்றும் சுக்கிரனின் பார்வை உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் விளைவை ஏற்படுத்தும். தொழில்-வியாபாரத்தில் லாபம் கூடும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.தொழில் செய்பவர்களுக்கு நல்ல பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம் 
சனியின் பத்தாம் பார்வை இந்த ராசிக்காரர்களுக்கு இனிமையாகவும் நன்மையாகவும் அமையும். நீங்கள் திரைப்படம், கலை, இசை, ஊடகம் போன்றவற்றுடன் தொடர்புடையவராக இருந்தால், இந்த நேரம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். சனியின் பத்தாம் பார்வை நான்காம் வீட்டில் விழப் போகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 12 ஆண்டு...இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், பண மழை கொட்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News