செவ்வாய் ராசி மாற்றம், இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் திறக்கும்

செவ்வாய்ப் பெயர்ச்சி 2022: அக்டோபர் 16 அன்று செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலனைத் தரும்.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 4, 2022, 09:21 AM IST
  • செவ்வாய்ப் பெயர்ச்சி 2022
  • செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்
  • 3 ராசிக்காரர்களுக்கு நன்மை தரும்.
செவ்வாய் ராசி மாற்றம், இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் திறக்கும் title=

மிதுனம் 2022 இல் செவ்வாய் ராசி மாற்றம்: ஜோதிடத்தில், செவ்வாய் கிரகம் நிலம், தைரியம், ஆற்றல், திருமணம் ஆகியவற்றின் காரக கிரகமாக கருதப்படுகிறது. இந்த கிரகம் அசுப ஸ்தானத்தில் இருந்தால் பாடி பில்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதே வேளையில் சுபமாக இருந்தால் கெடுதல்களை ஏற்படுத்தாமல் தடுக்க உதவும். பொதுவாக செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று கூறப்படுகிறது. தற்போது செவ்வாய் கிரகம் ரிஷப ராசியில் உள்ளது அக்டோபர் 16 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியில் பிரவேசிக்கிறார். செவ்வாயின் ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் பலன் தரும் ஆனால் 3 ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் நன்மை பலனை ஏற்படுத்தி தரும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம். 

செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் 

மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் செவ்வாய் பெயர்ச்சி நல்ல நாட்கள் கொண்டு தொடங்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நிதி நிலைமை நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கும். அதேபோல் உங்களின் பணி சிறப்பாக இருக்கும், இது பாராட்டுக்களைப் பெற்று தரும். மூத்தவர்களின் உதவி கிடைக்கும். கூட்டாக வேலை செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். 

கடகம்: செவ்வாய் சஞ்சாரம் காரணமாத்தால் கடக ராசிக்காரர்களின் தொழில் மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். அதேபோல் உங்களின் வேலை நெட்வொர்க் மிகவும் வலுவாக இருக்கும். புதிய ஒப்பந்தம் இறுதியானதாக இருக்கலாம். முதலீடு செய்ய இது நல்ல நேரமாக அமையும். 

சிம்மம்: செவ்வாய்ப் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் மெதுமெதுவாக நடக்க ஆரம்பிக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து வேலையிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். எங்காவது தூர இடத்துக்கு சுற்றுலா செல்லலாம். குடும்ப பிரச்சனைகள் தீர்வுக்கு. மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக அமையும். அதேபோல் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், அனுகூலமாகவும் இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News