புதன் பெயர்ச்சி 2022; காத்திருந்தது போதும்... 4 ராசிகளுக்கு இனி விடிவுகாலம்: செல்வம் மழையாக பொழியும்

அக்டோபர் 2 ஆம் தேதி புதன் பெயர்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் 4 ராசிகளின் வாழ்க்கையில் செல்வம் மழையாக பொழியப்போகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 1, 2022, 06:15 AM IST
  • புதன் பெயர்ச்சி பலன்கள்
  • செல்வம் கிடைக்கும் ராசிகள்
  • இவர்களுக்கு இனி ஜாக்பாட்
புதன் பெயர்ச்சி 2022; காத்திருந்தது போதும்... 4 ராசிகளுக்கு இனி விடிவுகாலம்: செல்வம் மழையாக பொழியும் title=

Budh Rashi Parivartan 2022: கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் நாளை அதாவது அக்டோபர் 2 ஆம் தேதி பெயர்ச்சி அடையப்போகிறது. இந்த கிரகத்தின் மாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், 4 ராசிகளுக்கு பொற்காலத்தை கொடுக்க இருக்கிறது. அவர்களுக்கு எங்கிருந்தோ திடீர் செல்வம் வர வாய்ப்பு உள்ளது. மேலும், குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை? யாருடைய அதிர்ஷ்டம் நாளை முதல் ஜொலிக்கப் போகிறது? என்பதை தெரிந்து கொள்வோம்.

விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு புதன் கிரகத்தின் சஞ்சாரம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. இந்த காலம் வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புதிய வருமானங்கள் உருவாகும், வியாபாரத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் புதனின் சஞ்சாரத்தால் வேலை-வியாபாரத்தில் பெரும் பலன்களைப் பெறப் போகிறார்கள். அவர்கள் வேலையில் பதவி உயர்வு பெறலாம். மேலும், மேலதிகாரி சில புதிய பொறுப்புகளை வழங்கலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த இது நல்ல நேரமாக இருக்கும். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்கலாம்.

மேலும் படிக்க | நவராத்திரியில் புதனின் பெரிய மாற்றம்: பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான் 

கன்னி: ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களுக்கு 10ம் வீட்டின் அதிபதி புதன். அதனால் அவர்களின் தொழிலில் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. புதிய இடத்தில் வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பொறுப்பு கூடும். பிள்ளைகளின் படிப்பில் உறுதி இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் செய்வதால் பல நல்ல செய்திகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். யாருக்காவது கடனாக கொடுத்த பணம் திடீரென திரும்ப வரலாம். எங்காவது சொத்தில் முதலீடு செய்ய மனம் வரலாம். வீட்டில் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கிரகங்கள் ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் விருப்பம் அதாவது சாய்ஸ்!’ இதுக்கு இந்த கிரகம் காரணம்’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News