காதலியுடன் பேசிக்கொண்டே குழி தோண்டிய இளைஞர்! பிறகு என்ன ஆனது என்று பாருங்கள்!

தனது காதலியிடம் பேசிக்கொண்டே கையில் குச்சியுடன் ஒரு நபர் குழி தோண்டுகிறார். அடுத்து என்ன நடந்தது என்ற காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : Oct 3, 2024, 03:41 PM IST
  • காதலியுடன் பேசிக் கொண்டே நிலத்தை தோண்டிய நபர்.
  • மண்ணுக்கடியில் இருந்து எழுந்த பிணம்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
காதலியுடன் பேசிக்கொண்டே குழி தோண்டிய இளைஞர்! பிறகு என்ன ஆனது என்று பாருங்கள்! title=

சமூக ஊடகம் என்பது ஒரு பெரிய ஆன்லைன் விளையாட்டு மைதானம் போன்றது, மக்கள் எப்போது வேண்டுமானாலும் எல்லா வகையான வீடியோக்களையும் பகிரலாம் மற்றும் பார்க்கலாம். வேடிக்கையான வீடியோக்கள், நடன அசைவுகள் அல்லது அருமையான தந்திரங்களைக் காட்டலாம். சில நேரங்களில், இந்த வீடியோக்களில் ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். அப்படி ஒரு காட்சி தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது காதலியிடம் பேசிக் கொண்டிருக்கும் நபர் உலகை மறந்து தரையில் குழி தோண்டி கொண்டிருக்கிறார். அதன் பின்பு நடக்கும் காமெடி காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, இப்போது நிறைய பேர் இதை ஆன்லைனில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சுத்து போட்ட சுறா... நடுக்கடலில் சண்டை போட்ட மீனவர் - திக் திக் வைரல் வீடியோ

ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு இளைஞர் கையில் சிறிய மண்வெட்டியைப் பிடித்துக் கொண்டு தரையில் படுத்திருக்கிறான். தனது காதலியுடன் போனில் பேசிக்கொண்டே தரையை தோண்டுகிறார். நீண்ட நேரம் பேசி கொண்டே பெரிய குழியை தோண்டிவிடுகிறார். எவ்வளவு பெரிய குழியை தோண்டி உள்ளோம் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. அப்போது திடீரென்று, ஆச்சரியமான ஒன்று நடக்கிறது. மண்ணுக்குள் புதைத்து வைத்து இருக்கும் சடலம் ஒன்று எழுந்து அவரது கையை பிடிக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் போன் பேசிக்கொண்டே இருக்கிறார். பின்பு உணர்ந்ததும் அலறி அடித்து ஓட முயற்சி செய்கிறார். ஆனால் அந்த வெள்ளை நிற சடலம் அவரை விடமால் கையை பிடித்து கொள்கிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Caromcaro_b)

பிறகு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அலறியடித்து ஓடுகிறார். இன்ஸ்டாகிராமில் சித்தரிக்கப்பட்ட காமெடி வீடியோவாக இது எடுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்து சிரித்துள்ளனர். இந்த வீடியோ iamcaro_b என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பயனர், "அது வருவதை நான் பார்க்கவில்லை!" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "நான் மூச்சு விட முடியாமல் சிரித்தேன்!" என்றும், "அவர் உண்மையில் ஒரு பெரிய தவறு செய்தார்!" என்றும் பதிவிட்டுள்ளனர். தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோ 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | நீரில் மீன் வேட்டை... அடுத்த நொடியே நடுவானில் விருந்து... வியக்க வைக்கும் சூப்பர் ஸ்டார் கழுகு

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News