சுறா மீது குதித்து கடலில் சவாரி செய்த நபரின் வைரல் வீடியோ

Shark stunt viral video : கடலில் சுறாக்கள் வட்டமடிக்கும்போது ஒருவர் ஒரு சுறா மீது குதித்து சவாரி செய்யும் அதிர்ச்சி வீடியோ வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2024, 01:03 PM IST
  • சுறா மீது சவாரி செய்யும் நபர்
  • நடுக்கடலில் நடந்த விபரீதம்
  • சுறா கருணையால் உயிர் பிழைப்பு
சுறா மீது குதித்து கடலில் சவாரி செய்த நபரின் வைரல் வீடியோ title=

நாள்தோறும் விநோதங்கள் பல நடக்கும் இந்த உலகில் சிலர் விபரீதங்களையும் விளையாட்டாக நினைத்து செய்யும் கூத்துக்களும் நடக்கவே செய்கின்றன. அப்படி ஒருவர் விளையாட்டாக நினைத்து நடுக்கடலில் சுறா மீது குதித்து சவாரி செய்யும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது. அவர் என்னவோ ஜாலிக்காக சுறா மீது குதிப்பதை செய்திருக்கலாம். ஆனால் சுறா தாக்க நினைத்திருந்தால் ஒரு நொடியில் அவரின் உயிர் பிரிந்திருக்கும். நல்ல வேளையாக சுறா அதனை செய்யவில்லை. இதனால் தப்பிப் பிழத்தை அந்த நபர் வீடியோ இப்போது எக்ஸ் உள்ளிட்ட பக்கங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் நண்பர்கள் ஒரு குழவாக கப்பல் ஒன்றில் சுற்றுலா சென்றிருப்பது தெரிகிறது. நிறைய சுறாக்கள் உலாவும் பகுதி என்பதை தெரிந்தே தான் அவர்கள் அங்கு சென்றிருக்கிறார். அவர்கள் எதிர்பார்த்தது போலவே சுறாக்கள் கப்பலை சுற்றி வட்டமடிக்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட சுறாக்களை பார்த்ததும் இவர்களால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. எல்லோரும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, உடன் சென்ற ஒருவருக்கும் மட்டும் அந்த இன்பமான சூழலில் வியப்பின் உச்சத்துக்கு சென்றுவிட்டார். அதனால் கடலில் உலாவிக் கொண்டிருந்த ஒரு சுறா மீது திடீரென குதித்துவிட்டார். நல்லவேளையாக கடலுக்குள் ஏதும் வழுக்கி விழாமல் சுறா மீதே சுதாரித்து நின்று கொண்டார்.

மேலும் படிக்க | வைரல் வீடியோ : விபத்தில் தூள்தூளான ஸ்கூட்டர், உயிர் பிழைத்த அதிசய மனிதன்

அந்த சுறாவும் அவரை ஏதும் செய்யவில்லை. இதனால் சிறிது தூரம் அந்த சுறா மீது இருந்தவாறு சவாரியும் செய்கிறார். கப்பலில் இருந்த அவருடைய நண்பர்கள் எல்லாம் அச்சத்தின் உச்சத்துக்கே சென்று அவரை மீண்டும் கப்பலுக்கு வருமாறு வற்புறுத்துகின்றனர். கடவுளே அவனை எப்படியாவது காப்பாற்றிவிடு என கூச்சலிட்டவாறே நண்பனை அழைக்கின்றனர். சுறா மீது இருந்தவரும் ஒரு குஷியில் குதித்துவிட்டார். ஆனால் அவர் திரும்பி கப்பலுக்கு வந்தாரா? இல்லையா? என்பது அந்த வீடியோவில் தெரியவில்லை. இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

வீடியோ எடுத்த விதங்களை எல்லாம் பார்க்கும்போது பழைய வீடியோ போல் தான் தெரிகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் இப்போதும் இந்த வீடியோவை பார்த்து பலரும் தங்களின் அச்சத்தை தெரிவித்துள்ளனர். சுற்றுலா செல்லும்போது இப்படியான  விபரீதங்களில் ஈடுபடக்கூடாது, நொடிப்பொழுது சாகசம் மூலம் கிடைக்கும் சந்தோஷம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் முடித்துவிடும் என்று எச்சரிக்கை கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | சே... சும்மா இருங்களேண்டா... சிங்க குட்டிகளின் அட்ராசிட்டீஸ்... சிரிப்புக்கு 100% கேரண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News