நோ பிராப்ளம் வயசாச்சுன்னா மறதி வர்றது சகஜம்தான்: நாய்க்குட்டி வீடியோ வைரல்

வயதாவதால் வரும் சங்கடங்களை எதிர்கொள்ளும் முதியவர்களின் இயல்பான வாழ்க்கையை க்யூட்டாக சொல்லும் சுவாரசியமான குட்டி வீடியோ, இணையத்தில் வைரலாகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 2, 2022, 12:33 PM IST
  • பார்க்கப் பார்க்கத் திகட்டாத குட்டிக் குட்டிக் குறும்புகள்
  • என்னம்மா இப்படி பண்றீங்களே: பாவமாய் நிற்கும் நாய்க்குட்டி
  • என்னை விட்டுட்டு போயிடுவியா: உறைந்து நிற்கும் செல்லப்பிராணி
நோ பிராப்ளம் வயசாச்சுன்னா மறதி வர்றது சகஜம்தான்: நாய்க்குட்டி வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: செல்லப்பிராணிகளை வளர்ப்பது அவற்றுடன் நேரம் செலவிடுவது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமானது. மனிதர்களின் நெருங்கியத் நண்பர்களாக மாறிவிட்டன விலங்குகள்.

வீட்டில் இருக்கும்போதும், வெளியில் செல்லும்போதும் செல்லப்பிராணிகளை தங்களுடன் அழைத்துச் செல்வது என்பது இன்று ஏறக்குறைய இயல்பாகிவிட்டது. ஆனால், வெளியே அழைத்துச் செல்லும் செல்லப்பிராணிகள் எவை என்று முடிவு செய்வது அவற்றின் தன்மையைப் பொறுத்துதான்.

பொதுவாக செல்லப்பிராணி என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது நாய்க்குட்டிகள் தான். நாய் நன்றியுள்ளது என்பதால் மட்டுமல்ல, அவை பாதுகாவலனாகவும், உற்றத் தோழனாகவும் விளங்கும் என்பதால் செல்லக்குட்டிகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது நாய்க்குட்டிகள்

மேலும் படிக்க | குரங்குப்பிடி வேண்டாம்மா: செல்லம் கொஞ்சும் குட்டிக் குரங்கு

விலங்குகளின் புத்திசாலித்தனம் அவற்றின் அப்பாவித்தனம் ஆகியவை மனதை மயக்குபவை. இன்றைய நவீன உலகில், எதிர்பாராத தருணங்களையும், சிறு சிறு நிகழ்வுகளையும் படம் பிடித்து அவற்றை இணையத்தில் பதிவேற்றுவதால் பலராலும் ஒருவர் அனுபவித்த விஷயத்தை பார்த்து ரசிக்க முடிகிறது.

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் பல வீடியோக்கள் வைரலாகின்றன. அவற்றில் ஒரு வீடியோ க்யூட்டாக இருக்கிறது. வயதான பெண்மணி ஒருவர் நடந்து செல்கிறார். இந்த வீடியோவை பார்க்கத் தொடங்கும்போது சாதாரணமானதாகவே தெரிகிறது. இறுதியில் தான் வீடியோவின் உண்மையான பரிணாமம் புரிகிறது.

நீங்களும் இந்த வீடியோவை இறுதி வரை பாருங்கள்

வயதான பெண்மணி நடந்து செல்கிறார். அவர் சாலையில் இருந்து உள்ளே செல்லும்போதுதான் கையில் நாய் செயின் மட்டும் இருப்பதையும், நாய் இல்லை என்பதையும் பார்த்து பதற்றப்படுகிறார்.

பதற்றத்துடன் தான் வந்த பாதையில் திரும்பி ஓடும் மூதாட்டி, கார் அருகே தன்னுடைய குட்டி நாய் நின்றிருப்பதைப் பார்த்து ஆனந்தப்படுகிறார். ஆனால், அந்த நாய்க்குட்டி பரிதாபமாக பார்த்தப்படி அமைதியாக நிற்கிறது.

மேலும் படிக்க | வம்புக்கு இழுக்கும் விவகார குழந்தை - வைரல் வீடியோ

அதைப் பார்க்கும் அந்த மூதாட்டி நாய்க்குட்டியை கொஞ்சுகிறார். மறதி என்பது வேறு, கவனக்குறைவு வேறு என்பது பாவம் பாட்டிக்கு புரிந்துவிட்டது. ஆனால் பரிதாபமாக பார்க்கும் தனது செல்லத்தைக் கொஞ்சி தாஜா செய்யும் பாட்டியின் வீடியோ அழகாகவும் அற்புதமாகவும் இருக்கிறது.

இந்த மறதி வீடியோஇணையத்தில் வெளியாகி பலரின் மனதையும் கவர்ந்துள்ளது. குட்டிக் குட்டி மறதிகளும், குறும்புகளும் செயல்களும் நம்மை சிரிக்க வைக்கிறது.

இதுபோன்ற இயல்பான நிகழ்வுகளையும், வித்தியாசமான வீடியோக்களையும் பதிவேற்றுவதில் பிரபலமான @buitengebieden என்ற டிவிட்டர் கணக்கில் இருந்து இந்த அணிலின் குறும்பு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சாலை உலா செல்லும் வாத்துக் குடும்பம்: போக்குவரத்து காவலரின் மனிதாபிமான உதவி

மேலும் படிக்க | என்னை செல்லம் கொஞ்ச மாட்டியா: வைரலாகும் யானையின் கட்டிப்பிடி வைத்தியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News