Viral Video: வலையில் சிக்கி தவித்த ராஜநாகம்! மீட்டு தாகம் தணித்த நபர்!

பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதால் தொடர்ந்து விதவிதமான பாம்பு வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. உலகில் லட்சக்கணக்கான பாம்புகள் இருந்தாலும், அவற்றில் சில மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 4, 2023, 03:10 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • ராஜ நாகப்பாம்புகள் மிகவும் ஆபத்தானவை.
  • பாம்புகள் தொடர்பான வைரல் வீடியோ.
 Viral Video: வலையில் சிக்கி தவித்த ராஜநாகம்! மீட்டு தாகம் தணித்த நபர்! title=

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் எண்ணிலடங்காத வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு எனலாம். பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதால் தொடர்ந்து விதவிதமான பாம்பு வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. உலகில் லட்சக்கணக்கான பாம்புகள் இருந்தாலும், அவற்றில் சில மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. பாம்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே உடல் வெலவெலத்துப் போகும்.

பாம்பை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான். பொதுவாக பாம்புகளை கண்டால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அங்கிருந்து ஓடி விடுவார்கள். ஆனால், நமக்கு அச்சத்தை கொடுக்கும் பாம்புகளை அருகாமையில் பார்க்க சமூக வலைத்தள வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான விஷயங்களையும், உண்மைகளையும் நாம் இந்த வீடியோக்களில் பார்க்கிறோம். சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன என்றாலும் சமீப காலங்களில்  குறிப்பாக பாம்பு வீடியோ எளிதில் வைரலாகிறது. தற்போதும் வலையில் அகப்பட்டு சிக்கி கொண்ட ராஜ நாகத்தை காப்பாற்றி அதன் தாகத்தை ஒரு நபர் தணிக்கும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. 

வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு நபர்,  மீன்வலையில் சிக்கிய மிகப்பெரிய நாகப்பாம்பை விடுவித்து அதன் தாகத்தை தணித்து வைக்கிறார். அந்த  வீடியோ மிகவும் வியப்பைக் கொடுக்கிறது.  வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒடிசாவின் பத்ராக் பகுதியில் உள்ள சுமார் 6 நாட்களாக மீன் வலையில் சிக்கித் தவித்த ஒரு பெரிய விஷ நாகப்பாம்பு  உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டது. தாகத்துடன் இருக்கும் பாம்புக்கு ஒரு பாட்டில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. பாம்பு அதனை மிக வேகமாக அருந்துவதில் இருந்து அது எவ்வாறு தாகத்தினால் தவித்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News