Viral Video: மருத்துவமனைக்குள் நுழைந்த ராட்சத யானை, அடுத்து என்னாச்சி

Elephant In The Hospital: மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி ராணுவ மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சிகரமான சம்பவத்தை கண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 8, 2022, 02:03 PM IST
  • திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்த காட்டு யானை.
  • ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
  • இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Viral Video: மருத்துவமனைக்குள் நுழைந்த ராட்சத யானை, அடுத்து என்னாச்சி title=

யானையின் வைரல் வீடியோ: இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக இருக்கின்றன. அதுவும் யானை, பாம்பு போன்ற வீடியோக்கள் எப்போதும் பரவலாக பார்க்கப்பட்டு பகிரப்படுகின்றன. சில நேரங்களில் இந்த வீடியோக்களை பார்ப்பது வேடிக்கையாகவும், சில சமயங்களில் மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றது. 

அதன்படி தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி ராணுவ மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை கண்டனர். உண்மையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா, பின்னகுரி ராணுவ முகாம் மருத்துவமனையில் ராட்சத யானை நுழைந்தபோது மருத்துவமனை எப்படி இருந்தது என்ற புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க | Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்! 

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இரண்டு காட்டு யானை திடீரென மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவமனையின் கேலரியில் சுற்றித் திரிந்தன. படங்களைப் பகிர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி சுஷாந்த் நந்தா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் 'அறையில் யானை, ஜல்பைகுரி கண்டோன்மென்ட்டில் இருந்து' என்ற தலைப்புடன் சில படங்களைப் பகிர்ந்துள்ளார்.

 

அதில், ஒரு யானை மருத்துவமனையின் கேலரியில் சுற்றித் திரிகிறது. மருத்துவமனையின் நடைபாதையில் இரண்டு யானைகள் சுதந்திரமாக நடமாடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு யானை கதவு வழியாக வந்து கேலரிக்குள் தனது பெரிய உடலை பொருத்த முயற்சிக்கிறது.

யானை சிறிது நேரம் நகராமல் நடைபாதையில் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், தொடர்ந்து வீடியோவை எடுத்தனர். மேலும் மருத்துவமனையில் யானைகளை பார்த்த ட்விட்டர் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வினோத நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊகடங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

மேலும் படிக்க | தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News