பொது நிகழ்ச்சியில் பாலியல் தொல்லைக்கு ஆளான பின்னணி பாடகி சின்மயி

பொது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிரபல பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். 

Last Updated : Mar 12, 2018, 07:57 PM IST
பொது நிகழ்ச்சியில் பாலியல் தொல்லைக்கு ஆளான பின்னணி பாடகி சின்மயி title=

எந்த விசியமாக இருந்தாலும் தைரியமாக பேசக்கூடியவர் பின்னணி பாடகி சின்மயி. நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சென்றேன். அப்பொழுது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன் எனக் கூறினார்.

இதனையடுத்து, பின்னணி பாடகி சின்மயி, தன்னுடைய சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் கூறியதாவது:- 

இதில் எனக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், பல ஆண்களும், பெண்களும் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கதையை பகிர்ந்தார்கள். அதில், ஆசிரியர்கள், சகோதர்கள், தாத்தா, பாட்டிகள், உறவினர்கள், சக பயணிகள் என நெருங்கிய நபர்கள் தான் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளாக  உள்ளனர் என்பதுதான்.. அதிர்ச்சியான விஷயமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News