மத்திய அரசு வழங்கிய வெண்டிலேட்டர்கள் கிடப்பில் போடப்பட்டதா; தணிக்கைக்கு பிரதமர் மோடி உத்தரவு

கொரோனா இரண்டாவது அலை பரவல் நிலைமை குறித்து பிரதமர் மோடியின் தலைமையில், உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 16, 2021, 12:30 PM IST
  • கிராமங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  • ஊரக பகுதிகளில், பரிசோதனைகளை தீவிரப்படுத்தி, தொற்றுக்கண்டறிய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய அரசு வழங்கிய வெண்டிலேட்டர்கள் கிடப்பில் போடப்பட்டதா; தணிக்கைக்கு பிரதமர் மோடி உத்தரவு title=

கொரோனா இரண்டாவது அலை பரவல் நிலைமை குறித்து பிரதமர் மோடியின் தலைமையில், உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

நாட்டில் கோவிட் -19 (COVID-19) நிலைமையை மறுபரிசீலனை செய்த பிரதமர் மோடி, கிராமப்புறங்களில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த ஒவ்வோரு வீடாக சென்று பரிசோதனை செய்தல், சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

ஊரக பகுதிகளில், ஆஷா மற்றும் ஆங்கன்வாடி தொழிலாளர்களை ஈடுபடுத்தி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

கிராமங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.  ஊரக பகுதிகளில், பரிசோதனைகளை தீவிரப்படுத்தி, தொற்றுக்கண்டறிய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார். உள்ளூர் மட்டத்தில் , நோய் கட்டுபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய காலத்தின் தேவை என்றார்.

மேலும், மத்திய அரசு அனுப்பிய வெண்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படாமல், சில மாநிலங்களில் பயன்பாடின்றி கிடப்பில் இருப்பதாக வந்துள்ள தகவல் வந்துள்ளது தனது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறிய அவர், மத்திய அரசு வழங்கும்  வெண்டிலேட்டர்கள் மற்றும் இதர சாதனங்களின் பயன்பாடு குறித்து உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், கோவிட் -19  நிலைமை குறித்த மறு ஆய்வுக் கூட்டத்தில், சுகாதார ஊழியர்களுக்கு வென்டிலேட்டர்கள் மற்றும் பிற உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினார். 

அதோடு, தடுப்பூசி வழங்கும் பணியை தீவிரப்படுத்துவதோடு, தடுப்பூசி வழங்குவது தொடர்பாக மாநிலங்களுடன் அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா தவிர, சுகாதார அமைச்சர் அமித் ஷா தவிர, ஐ.சி.எம்.ஏ அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனின் இரண்டாவது அலைக்கு மத்தியில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி (PM Narendra Modi) தொடர்ந்து பல நிலையில் கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டு வருகிறார்.

ALSO READ| இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள  பிற தடுப்பூசி விபரங்கள் 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News