ஓவரா போற, ஒழுங்கா இரு: சீண்டிய நபரின் சட்டையை பிடித்து திட்டிய ஒராங்குட்டான்

Viral Zoo Video: ஒரு ஒராங்குட்டானை கிண்டல் செய்த நபர் அதனிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 8, 2022, 05:35 PM IST
  • சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஓவரா போற, ஒழுங்கா இரு: சீண்டிய நபரின் சட்டையை பிடித்து திட்டிய ஒராங்குட்டான் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மக்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்துடன் மிருகக்காட்சிசாலைகளுக்கு சென்று மிருகங்களை கண்டு ரசிப்பதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் சிலர் விலங்குகள் மற்றும் பறவைகளை கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இது ஒரு தவறான பழக்கமாகும். 

விலங்குகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருப்பதால் அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த எண்ணம் தவறானது என சில நேரங்களில் விலங்குகள் புரியவைக்கின்றன. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | குறட்டை விட்டு தூங்கும் டீச்சர், விசிறும் மாணவி: ஷாக் ஆன நெட்டிசன்கள் 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒராங்குட்டானை தூரத்தில் இருந்து ஒருவர் கிண்டல் செய்வதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. ஆனால் அடுத்த நொடியே ஒராங்குட்டான் அவரைப் பிடித்து தன்னை நோக்கி இழுக்கத் தொடங்குகிறது. ஒராங்குட்டானின் இந்த செயலால் அந்த நபர் மிகவும் அதிர்ச்சி அடைந்து பயத்தில் பதற்றமடைகிறார். ஒராங்குட்டான் அந்த நபரை விடுவிக்கும் எண்ணத்தில் இல்லை என்பது இந்த வீடியோவை பார்த்தால் தெரிகிறது. 

சின்னாபின்னமாக்கிய ஒராங்குட்டான்

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒருவர் தனது நண்பர்களுடன் மிருகக்காட்சிசாலையை பார்வையிட வந்திருப்பதை காண முடிகிறது. அவர் ஒராங்குட்டானின் கூண்டுக்கு அருகில் சென்று அதை பார்த்து சில சைகைகளை செய்கிறார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, ஒராங்குட்டான் கையை நீட்டி அவரது ஆடைகளைப் பிடிக்கிறது. ஒராங்குட்டான் அந்த நபரை மெதுவாக தன் பக்கம் இழுக்கிறது.

அந்த நபர் ஒராங்குட்டானின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பல வழிகளில் முயற்சி செய்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் தோல்வியடைகின்றன. சிறிது நேரத்தில் சிம்பன்சி அவரை முழுமையாகப் பிடித்துக்கொள்கிறது. 

சினம் கொண்ட ஒராங்குட்டானின் வீடியோவை இங்கே காணலாம்:

அச்சத்தின் உச்சிக்கு சென்ற நபர்

உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ gieddeeandgiedde என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடியோவில், ஒராங்குட்டான் அந்த நபரை பிடிக்கும்போது, ​​​​அவர் அச்சத்தின் உச்சிக்கே செல்வதை பார்க்க முடிகின்றது. மிருகக்காட்சிசாலையில் விலங்குகளை கிண்டல் செய்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பாடமாக இருக்கும். 

இந்த வீடியோ டிரெண்ட் ஆகி வருகிறது. இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | "யாருப்பா நீங்கல்லாம், எங்கிருந்து வர்றீங்க?": சிரிப்பை அடக்க முடியாமல் கேட்கும் நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News