கலிபோர்னியா சாலையில் திடீரென பெய்த ‘டாலர்’ மழை!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலை சாலையில் திடீரென டாலர் நோட்டுகள் மழையாக பெய்யத் தொடங்கியது. ஒரு வைரலான வீடியோவில், மக்கள் எப்படி காரை நிறுத்தி நோட்டுகளை சேகரிக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காணலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 21, 2021, 02:45 PM IST
  • சாலையில் டாலர் நோட்டுகள் மழை பெய்யத் தொடங்கியது.
  • அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த வினோத சமபவம்.
  • நோட்டு மழையால் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது.
கலிபோர்னியா சாலையில் திடீரென பெய்த ‘டாலர்’ மழை! title=

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலை சாலையில் திடீரென டாலர் நோட்டுகள் மழையாக பெய்யத் தொடங்கியது. ஒரு வைரலான வீடியோவில், மக்கள் எப்படி காரை நிறுத்தி நோட்டுகளை எடுக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காணலாம்.

டாலர் நோட்டு மழையால் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது

அமெரிக்காவில் (America) கலிபோர்னியா நெடுஞ்சாலையில் பெய்த டாலர் மழை குறித்து செய்தியாளர்கலிடம் கூறிய அங்கிருந்த மக்களில் ஒருவர், "நெடுஞ்சாலையில் ஏராளமான பணத் தாள்கள் கிடந்தன, மக்கள் வாகனங்களை நிறுத்தி, நெடுஞ்சாலையை முற்றிலுமாகத் தடுத்து, பைகளில் பணத்தை நிரப்பத் தொடங்கினர்." என்றார். இது தொடர்பாக சாலையில் வாகனத்தை நிறுத்தி, போக்குவரத்தை தடுத்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

பணத்தை திருப்பித் தர வேண்டும்

CHP செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், "நாங்கள் இப்போது FBI உடன் இணைந்து கூட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் நீங்கள் ஏதேனும் பணத்தை எடுத்திருந்தால், உடனடியாக CHP அலுவலகத்திற்கு திருப்பி அனுப்புமாறு பரிந்துரைக்கிறேன். எங்களிடம் ஏராளமாக வீடோ கிளிப்பிங் உள்ளது. உங்களை எளிதாக அடையாளம் காணலாம். அப்போது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்த்துள்ளார்.

ALSO READ | ‘எல்லாமே அலர்ஜி என்றால் எப்படித் தான் வாழ்வது’; இளம் பெண்ணின் பரிதாப வாழ்க்கை

பணட்த்ஹை யாரெல்லாம் எடுத்துக் கொண்டார்கள் என்பதை, வீடியோவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களில் சிலவற்றின் பல ஸ்கிரீன் ஷாட்கள் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் CHP ஆல் வெளியிடப்பட்டது, இது FBI உடன் சேர்ந்து இந்த சம்பவத்தை விசாரித்தது. புகைப்படங்களில் உள்ள வாகன ஓட்டிகளின் அடையாளங்களை கண்டறிய முயற்சிப்பதாக ஏஜென்சி கூறியதுடன், "சாத்தியமான கிரிமினல் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க 48 மணி நேரத்திற்குள்" பணத்தைத் திருப்பித் தருமாறு வலியுறுத்தியது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

எனினும், இந்த வினோத சமபத்திற்கான காரணம் தெரியவில்லை. அந்த வழியாக சென்ற வாகனத்தில் ஏற்றிச் சென்ற பணம் பறந்ததனால் ஏற்பட்டதா; எதனால் பறந்தது என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை. 

ALSO READ | 85 நிமிடங்கள் அமெரிக்காவின் அதிபர்- கமலா ஹாரீஸூக்கு கிடைத்த கௌரவம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News