மீடியா! பொழப்புக்காக பொய்யை பரப்பாதீங்க -கஸ்தூரி காட்டம்!

என்னது பிக்பாஸ் வீட்டில் நான் இருக்கேனா? காட்டத்துடன் விளக்கமளித்தா நடிகை கஸ்தூரி! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2018, 12:56 PM IST
மீடியா! பொழப்புக்காக பொய்யை பரப்பாதீங்க -கஸ்தூரி காட்டம்! title=

என்னது பிக்பாஸ் வீட்டில் நான் இருக்கேனா? காட்டத்துடன் விளக்கமளித்தா நடிகை கஸ்தூரி! 

கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி முதல் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இது வரை நித்யா, ரம்யா, ஷாரிக், மமதி, அனந்த் வைத்தியநாதன் ஆகிய 5 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில், தான் அமெரிக்காவில் தன்னுடைய வீட்டில் இருப்பதாகவும், புற்றுநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் பேசுகையில்., இதுபோன்ற பொய்யை மட்டும் வேகமாக பரப்பிவருகின்றனர். ரொம்ப பேருக்கு உண்மையை விட சுவாரஷ்யம் தான் முக்கியமாக இருக்கிறது. 

பிக்பாஸ் வீட்டில் நுழையவில்லை என்பதற்காக நான் இந்த மறுப்பை சொல்லவில்லை. அதைவிட ஒரு பெரிய விஷயம் இருக்கிறது. அதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். பிக்பாஸ் வீட்டிற்கு நான் மறுப்பு சொல்லிவிட்டேன். இதற்க்கு முன் சின்ன வீடு, பெரிய வீடு என நிறைய கிசுகிசு வந்துள்ளது. அனைத்துக்கும் நான் மறுப்பு சொல்ல முடியுமா?. எவ்வளவு அசிங்கம்.

அனைவரும் நெருப்பில்லாமல் புகையுமா? என்று கேட்பீர்கள். நெருப்பா? தொவரம்பருப்பு கூட இல்லை; ஆனால், கொழுந்துவிட்டு ஈரியுதே?. இதுதான் பெரிய உதாரணம்; உப்புமா ஊடகங்களுடைய குப்பை மனப்பான்மை. இது, சின்ன பிரச்சினை இதனால் யாருக்கும் நஷ்டம் இல்லை. அனால், சமூக வலைத்தளம் மற்றும் கட்செவியஞ்சலில் வரும் பொய்யை நம்பி சிலரின் உயிர்கூட போயுள்ளது. அதனால், நான் மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன்; மீடியா! போலப்புகாக பொய்யை பரப்பாதீர்கள். பொதுமக்களே! பொழுதுபோக்கிற்காக பொய்யை நம்பாதீங்க! என அந்த வீடியோவில் பேசியுள்ளார். 

 

Trending News