Men vs Pollution: ஆண்களுக்கு ரசாயன மாசுபாடு ஏற்படுத்தும் விந்தணு குறைபாடு

இரசாயன மாசுபடுத்திகள் விந்தணுவின் தரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா? ரசாயன காக்டெய்ல்களின் அபாயங்களை அளவிடும் ஆய்வின் அதிர்ச்சி தரும் முடிவுகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 11, 2022, 01:20 PM IST
  • இரசாயன மாசுபடுத்திகள் விந்தணுவின் தரத்துடன் இணைந்துள்ளது
  • ரசாயன கலவையின் அபாயங்களை அளவிடும் ஆய்வு
  • அங்கீகரிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிகமாக இருக்கிறது
Men vs Pollution: ஆண்களுக்கு ரசாயன மாசுபாடு ஏற்படுத்தும் விந்தணு குறைபாடு title=

மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் மாசுபாடு பிரச்சனை ஆரோக்கியத்திற்கு சவாலை ஏற்படுத்துகிறது.

சுவாச நோய்த்தொற்றுகள், இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதற்கு காரணமாகிறது காற்று மாசுபாடு. பல்வேறு மாசுபாடுகளின் காரணமாக பல்வேறு மோசமான சுகாதார விளைவுகள் பதிவாகியுள்ளன.

இப்போது வெளியாகியுள்ள புதிய ஆராய்ச்சி, மக்களின் உடலில் அளவிடப்படும் இரசாயன மாசுபாடுகளின் கலவையானது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை மிகவும் குறைக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.

பிஸ்பெனால்கள் மற்றும் டையாக்ஸின்கள் போன்ற சில இரசாயனங்கள் ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்தி விந்தணுவின் தரத்தை சேதப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | ஆண்களுக்கான எச்சரிக்கை... விந்தணுவை குறைக்கும் இந்த உணவுகள் வேண்டாமே...

அதிலும் இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்த சேர்மங்களின் சேர்க்கைகள் "வியக்க வைக்கும்" அளவுகளில் உட்சபட்ச அளவுகளில் உள்ளன. உதாரணமாக பாதுகாப்பானதாகக் கருதப்பட்டதை விட 100 மடங்கு வரை அதிக அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அதிக ஆபத்துகளுக்கு பிஸ்பெனால் ஏ (Bisphenol A (BPA)) காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

லண்டன் புரூனல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் கோர்டென்காம்ப் தலைமையில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆய்வுக் குழு இந்த அதிர்ச்சி தரும் முடிவுகளை தெரிவித்துள்ளது. 

இரசாயனங்களின் கலவைகளால் இருந்து ஏற்படும் ஆபத்தானது, ஆபத்து குறியீட்டின் அளவு அதிர்ச்சியளிப்பதாக தி கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | விந்தணு குறைபாடா? இந்த பழக்கங்கள் காரணமாக இருக்கலாம்

மேற்கத்திய நாடுகளில் ஆண்களின் விந்தணுவின் தரம் தொடர்ந்து குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் சர்வதேச இதழான  Environment International பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இரசாயனங்களின் தாக்கத்தை தீர்மானிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆண்குறி குறைபாடு, மார்பக புற்றுநோய் மற்றும் விரைகள் இறக்கம் போன்ற பல்வேறுவிதமான ஆண்களுக்கான பாலியல் கோளாறுகளை மாசுபாடு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

ரசாயனங்கள் ஹார்மோன்களை சீர்குலைப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான ஆய்வுகளால், சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்ள முடியும்.

விந்தணுவின் தரம் மோசமடையச் செய்யும் இரசாயனங்கள் பற்றி மேலும் தெளிவுபடுத்துவதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐரோப்பாவில் பதிவான தரவுகளின் அடிப்படையில் ஒரு கலவை இடர் மதிப்பீட்டை நடத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | Sperm Donation: விந்தணு தானம் குறித்து ‘அறியாத’ தகவல்கள்

"பிறப்புக்கு முந்தைய வெளிப்பாடுகளுக்குப் பிறகு விந்து தரத்தை பாதிக்கும் திறன் கொண்ட ரசாயனங்களை சேர்த்துள்ளோம், அவற்றில் ஆண்ட்ரோஜன் ஏற்பி எதிரிகள், ப்ரோஸ்டாக்லாண்டின் சிக்னலை சீர்குலைக்கும் பொருட்கள், டெஸ்டோஸ்டிரோன் தொகுப்பை அடக்குதல், ஸ்டீராய்டோஜெனிக் என்சைம்களைத் தடுக்கும் அல்லது ஆரில் ஹைட்ரோகார்பன் ஏற்பியை செயல்படுத்துகின்றன" என்று ஆய்வின் ஒரு பகுதி கூறுகிறது.

ஐரோப்பாவில் ஏற்படும் ஆபத்து அளவுகள் மற்றும் விந்து தரத்தைக் குறைப்பதற்கான குறிப்பு அளவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விஞ்ஞானிகள் அபாயக் குறியீட்டு அணுகுமுறையை (HI) பயன்படுத்தினர்.

மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ள 29 இரசாயனங்களின் ஆபத்துக் கூறுகளை சுருக்கமாகக் கூறுவதன் மூலம், 1 இன் குறியீட்டு மதிப்புடன் ஒப்பிடும் போது, ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான ரசாயன வெளிப்பாடுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!

20 இரசாயனங்களின் வெளிப்பாடுகள் 1.39 இன் அபாயக் குறியீட்டைச் சேர்த்தது மற்றும் பிஸ்பெனால் ஏ மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தது. பிஸ்பெனால் A ஐ மட்டும் நீக்குவது இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத உயர் கலவை அபாயங்களை விட்டுச்செல்லும்.

பாராசிட்டமால் மருந்தைப் பயன்படுத்தும் நபர்களிடையே கலவை அபாயங்களை அதிகரிப்பது கவலைத் தருவதாக உள்ளது.

பாராசிட்டமால் மருந்து பயன்பாடு பொதுவாகவே அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பாராசிட்டமால் மாத்திரைகள் பயன்பாடு அதிகமாக இருப்பது இந்திய ஆண்களுக்கும்  இந்த ஆபத்து இருக்குமோ என்ற கவலைகளை அதிகரிக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News