பெங்களூருவில் 12.9kg போதைப் பொருட்களை பறிமுதல்!

பெங்களூரு விமான நிலயத்தில் சுமார் 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது!

Last Updated : Apr 19, 2018, 02:22 PM IST
பெங்களூருவில் 12.9kg போதைப் பொருட்களை பறிமுதல்! title=

பெங்களூரு விமான நிலயத்தில் சுமார் 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது!

பெங்களூரு சுங்க துறை அதிகாரிகள் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் சுமார் 12.9kg அளவிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 6.5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதை மருந்து தடுப்பு பிரிவு, 1985-ன் கீழ் தடைசெய்யப்பட்ட பொருட்கள், இன்று பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் இருந்த பெரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்த சுங்கதுறை அதிகாரிகள் தெரிவிக்கையில்., கடத்தப்பட்ட பொருட்கள் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கும் முயற்சியின் போது பிடிப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கொரியர் மூலம் அனுப்ப முயற்சிக்கப்பட்ட இந்த பொருட்கள் சென்னையில் இருந்து கொலாலம்பூருக்கு அனுப்ப படுவதாக விலாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News