இளைஞர்கள் இந்த 6 பரிசோதனைகளை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்!

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய்த்தொற்றுகள், கொலஸ்ட்ரால் அளவை தெரிந்து கொள்ள முடியும்.

 

1 /6

சி-ரியாக்டிவ் புரத பரி சோதனை இந்த சோதனை மூலம் உங்கள் உடலில் கல்லீரலில் உள்ள பிரச்சனைகளை கண்டறியலாம். உங்கள் உடலில் அதிக அளவு சி-ரியாக்டிவ் புரதம் இருந்தால் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

2 /6

தைராய்டு பரி சோதனை இந்த பரி சோதனை மூலமா உங்கள் உடலில் தைராய்டு எவ்வாறு சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது  என்பதை தெரிந்து கொள்ள முடியும். இது உங்கள் இதய துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. 

3 /6

லிபிட் பரிசோதனை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சரி பார்க்க இந்த பரிசோதனை உதவுகிறது. இந்த சோதனை மேற்கொள்ளும் முன்பு குறைந்தது எட்டு மணிநேரம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். 

4 /6

சிபிசி பரிசோதனை சிபிசி சோதனை மூலம் உங்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள் போன்றவற்றை கணக்கிடலாம். இதன் மூலம் இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை கண்டறிய முடியும்.

5 /6

இரத்த பரிசோதனை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதன் மூலம் உங்கள் உடல் பல்வேறு உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

6 /6

பாலியல் ரீதியான பரி சோதனை இந்த பரிசோதனை மூலம் உங்களுக்கு ஏதேனும் பாலுறவு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்கள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் ஆபத்துகள் இருந்தால் ஆரம்பத்திலேயே சரி செய்ய உதவும்.