PPF: மாதம் ரூ.12,500 முதலீட்டில்... ஒரு கோடியை பெறுவது எப்படி..!!

இளம் வயதில் முதலீட்டை தொடங்குவதால் எளிதில் பணக்காரராகலாம். கல்வியை முடித்து வேலையில் சேர்ந்த உடனேயே, வாங்கும் சம்பளத்தில் சுமார் 10% என்ற அளவிலாவது சேமிக்க வேண்டும்.

நீண்ட கால முதலீட்டை புத்திசாலித்தனமாக திட்டமிட்டு செய்தால் கோடீஸ்வரர் ஆவது எளிது. பணத்தை பன்மடங்காக்கும்  சேமிப்பு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி என்னும் PPF.

1 /8

பொது வருங்கால வைப்பு நிதி  என்னும் PPF சேமிப்பு  திட்டத்தில், மாதம் ரூபாய் 12,500 சேமித்தால் எளிதில் கோடீஸ்வரர் ஆகலாம். 15 வருடங்களுக்கு தொடர்ந்து, தினம் ரூபாய் 416 என்ற அளவில் நீங்கள் முதலீடு செய்து வந்தால், கோடீவரனாகும் கனவு நிறைவேறும். 

2 /8

மாதம் ரூபாய் 12,500 முதலீடு செய்து வந்தால், சுமார் 7.1% வருடாந்திர வட்டி என்ற அளவில், கூட்டு வட்டியின் பயனால், 15 ஆண்டுகளில் முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூபாய் 40.68 கிடைக்கும். 

3 /8

PPF திட்டத்தில் 15 ஆண்டுகள் நீங்கள் செய்த முதலீடு ரூபாய் இரண்டு 22. 50 லட்சமாக இருக்கும். அதே சமயத்தில் வட்டி வருமானம் ரூ.18.18 லட்சம் என்ற அளவில் இருக்கும். கூட்டு வட்டியின் பயனால், வட்டி வருமானம் அதிகமாக இருக்கும்.  

4 /8

நீங்கள் கோடீஸ்வரர் ஆக விரும்பினால், 15 ஆண்டு கால முதலீட்டுக்கு பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு இரண்டு முறை இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் முதலீட்டு காலம் 25 ஆண்டுகளாக இருக்கும். 

5 /8

25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு முதிர்வு தொகையாக ₹ 1.03 கோடி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்த மொத்த முதலீட்டு தொகை ரூ.37.50 அளவில் இருக்கும். வட்டி வருமானமாக உங்களுக்கு கிடைக்கும் தொகை, ரூபாய் 65.58 லட்சம். 

6 /8

கூட்டு வட்டியினால், வட்டி தொகை முதலீட்டை விட அதிகமாக இருக்கும். பிபிஎஃப் திட்டத்தின் கீழ், பணத்தை பன்மடங்காக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், வருமான வரி விலக்கின் பலனையும் பெறலாம். 

7 /8

வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ், வருமான வரி விலக்கு உண்டு. இந்தத் முதலீட்டு திட்டத்தில் ரூபாய் 1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு கிடைக்கும். 

8 /8

கூடுதலாக பிபிஎப் முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுவதில்லை. மக்கள் மத்தியில் சிறு சேமிப்பு திட்டங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் நிலையில், மத்திய அரசு நடத்தும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது.