வார ராசி பலன்: மார்ச் கடைசி வாரம் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்!

வார ராசிபலன்: மார்ச் 25 முதல் 31 வரை மார்ச் மாதம் கடைசி வாரத்தில் முக்கிய கிரக சேர்க்கைகள் மற்றும் கிரக நிலை மாற்றங்கள் காரணமாக, முக்கியத்துவம் பெற்ற வாரமாக இருக்கிறது.

மார்ச் மாதம் கடைசி வாரத்தில், உருவாகும் பிரத்தியோகம், புத ஆதித்யராஜயோகம் உள்ளிட்ட உங்கள் காரணமாக, மேஷம் சிம்மம் உள்ளிட்ட ஐந்து ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.

1 /7

வார ராசிபலன்: மார்ச் மாதம் கடைசி வாரத்தில், ஏற்படும் புதன் பெயர்ச்சியும் அதனால் ஏற்படும், புதன் குரு பகவான் சேர்க்கையும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். மார்ச் மாதம் 26 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு மாறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

2 /7

மேஷ ராசிகளுக்கு மார்ச் மாதம் 25ஆம் தேதியுடன் தொடங்கும் கடைசி வாரம் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கும். நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். பயணங்கள் மூலம் ஆதாயமும் வெற்றியும் வந்து சேரும். குடும்ப வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருக்கும். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.  

3 /7

சிம்ம ராசியினருக்கு மார்ச் மாதம் 25 ஆம் தேதியுடன் தொடங்கும் கடைசி வாரம், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வாரமாக இருக்கும். திட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது.

4 /7

கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் 25ஆம் தேதி உடன் தொடங்கும் கடைசி வாரத்தில், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அலுவலகப் பணிகளில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாளாக வாட்டி வந்த பிரச்சனைகள் தீரும்.

5 /7

தனுசு ராசிகளுக்கு, மார்ச் மாதம் 25ஆம் தேதியுடன் தொடங்கும் கடைசி வாரம், வெற்றிகளை கொடுக்கும் வாரமாக இருக்கும். தடைபட்டு வந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி வரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்., பயணங்கள் மூதம் ஆதாயம் கிடைக்கும்.

6 /7

மகர ராசியினருக்கு மார்ச் மாதம் 25ஆம் தேதியுடன் தொடங்கும் கடைசி வாரம் சாதகமான வாரமாக இருக்கும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சுப காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். மனதில் நிம்மதி இருக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.