அருகில் வரும் ஏழரை சனி: 5 ராசிகளுக்கு கெடுபிடி காலம், இந்த பரிகாரங்கள் கைகொடுக்கும்

Ezharai Nattu San 2023: அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்றுகிறார். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அன்று பெயர்ச்சியாவார். 

1 /5

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் கும்ப ராசியில் நுழைகிறார். ஜனவரி 17ஆம் தேதி நடக்கவுள்ள சனியின் ராசி மாற்றம் சிலருக்கு கடினமான நாட்களின் ஆரம்பமாக அமையும். 

2 /5

சனி கும்ப ராசியில் நுழைந்தவுடன் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் மீது சனி தசை தொடங்கும். இவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

3 /5

சனி கும்ப ராசிக்கு வந்தவுடனேயே மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் ஆரம்பிக்கும். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

4 /5

மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கும் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பு ஏற்படும். இவர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் தொடங்கும்.

5 /5

சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோவிலுக்கு சென்று அவரை பிரார்த்திக்கலாம். அரச மரத்தின் கீழ் தீபம் ஏற்றி வழிபடலாம். அனுமான் சாலிசா, சனி சாலிசா, சனி ஸ்தோத்திரங்கள், கோளறு பதிகம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். ஏழை எளியவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவி செய்வது சனி பகவானை மகிழச்செய்யும்.