சூரியனின் சஞ்சாரத்தால் அடுத்த 15 நாட்களுக்கு இந்த 4 ராசிக்காரர்களுக்கு பாதிப்பு!

புதுடெல்லி: 2022ம் ஆண்டின் முதல் மாதம் பாதி முடிந்துவிட்டது. இப்போது கோள்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்னும் 15 நாட்களில் கிரக நிலைகளில் இன்னும் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகிறது. இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிறைய சிரமங்களை கொண்டு வரலாம்.

1 /5

அடுத்த 15 நாட்களில் சூரியன், சனி, புதன், செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மகர ராசியில் சூரியன் பிரவேசம் செய்கிறார். செவ்வாயும் ராசி மாறுகிறார். இந்த சூழ்நிலைகள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும்.

2 /5

கன்னி ராசி நேயர்களே, இந்தக் காலத்தில் கடின உழைப்புக்கு முழுப் பலன் கிடைக்காது. வேலையில் தடங்கல்கள் வரலாம். வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

3 /5

மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த 15 நாட்கள் கடினமாக இருக்கும். மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாயின் எதிரியான சனி, மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் சவால்களைத் தருவார். பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம்.  

4 /5

மிதுன ராசிக்காரர்களுக்கு இது நல்ல காலம் அல்ல. சனியின் பார்வையால் வெற்றிக்கு தடைகள் ஏற்படும். கடினமாக உழைத்தாலும், அதற்கு முழு பலன் கிடைக்காது.

5 /5

கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் பிரச்சனைகள் வரலாம். தொழிலிடத்தில் மதிப்பு குறையலாம். இந்த சூழ்நிலைகள் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்.