நவராத்திரியில் சரஸ்வதிபூஜை ஆயுதபூஜை போன்ற வழிபாடுகள் இந்த நவீன யுகத்தில் அவசியமா?

Navratri 2024 Concluding Day : ஒன்பது நாட்களாக அன்னையை ஆராதித்து ஆடிப்பாடி தொழுது, பூஜித்து இன்றுடன் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை செய்துவிட்டோம். நாளை விஜயதசமியுடன் நவராத்திரியின் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும்...

Ayudapuja & Saraswati Pooja Today : தீமைகளை அழித்து உலகை உய்விக்க ஆதிசக்தி, ருத்ர ரூபம் எடுத்து அசுரர்களை அழித்து மகிஷாசுரமர்த்தினி ஆனார். இந்த நவயுகத்திலும் ஏன் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்?

1 /9

இன்றுடன் இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. நாளை விஜயதசமி வித்யாரம்பம் களைகட்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முதல், புதிய தொழில் தொடங்குவது, கலைகளை கற்கத் தொடங்குவது என நாளை மிகவும் முக்கியமான நாள்

2 /9

விஜயதசமியில் தொடங்கும் அனைத்துக் காரியங்களும் நல்லபடியாக நடைபெறும், குறிப்பாக, கல்வி கற்கத் தொடங்குவது, புது விஷயங்களைத் தொடங்குவது நல்லது என்பது நம்பிக்கை

3 /9

நவராத்திரியின் எட்டாம் நாள் அன்னை, அசுரர்களை வதம் செய்துவிட்டு, ஆயுதங்களை கைவிட்டார், அவற்றுக்கு பூஜை செய்து சாந்திப்படுத்துவது என்பது சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடுவதன் வரலாறு 

4 /9

சரஸ்வதி பூஜை சரி. ஆனால், தொன்று தொட்டு வரும் வழக்கமான பல விஷயங்களை நாம் மாற்றிக் கொண்டே இருக்கும்போது அன்னை ஆயுதங்களை கைவிட்டதால் கொண்டாடப்படும் ஏன் ஆயுத பூஜையை மட்டும் இன்றும் கொண்டாட வேண்டும் என்று பலருக்கு கேள்வி எழலாம்

5 /9

அதற்கான அருமையான விளக்கம் என்ன தெரியுமா? ஆயுதம் என்பது ஒரு செயலை செய்ய பயன்படும் கருவி தான்

6 /9

இன்று ஆயுதம் என்பது ஒருவரின் மூலதனம். அதாவது மாணவர்களுக்கு கல்வி பயில உதவும் கருவிகள்

7 /9

தொழில் செய்பவர்களுக்கு அவர்களின் தொழிலில் பயன்படுத்தும் கருவிகள் ஆயுதம் என்று சொல்லலாம். அதேபோல, ஒரு வாகனத்தை வைத்திருப்பவருக்கு அது ஒரு கருவி தானே? எனவே, தான் ஆயுத பூஜை நாளன்று அனைத்துவிதமான கருவிகளுக்கும் பூஜை செய்வதை இன்றும் தொடர்கிறோம்

8 /9

இன்று நாம் பயன்படுத்தும் கருவிகளுக்கு பூஜை போட்ட பிறகு, அவற்றை பயன்படுத்தாமல் நாளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது வழக்கம். ஏனென்றால், இன்று அந்த கருவிகளுக்கு ஓய்வு கொடுக்கும் நாள்

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது