உலக கோப்பை 2023: சச்சின் கணிப்பு! இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு செல்லும்

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகளை இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார். 

 

 

1 /6

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.   

2 /6

இந்திய அணி அக்டோபர் 8 ஆம் தேதி முதல் போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.  

3 /6

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார். அவருடைய கணிப்பில் அரையிறுதிப் போட்டியில் முன்னேறும் 4 அணிகளை தெரிவித்துள்ளார்.  

4 /6

முதல் இடத்தில் இந்திய அணி இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என சச்சின் தெரிவித்துள்ளார்.   

5 /6

இந்த முறை உலக கோப்பை கிரிக்கெட் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் போட்டியில் பங்கேற்று இருக்கும் 10 அணிகளுடன் ஒவ்வொரு முறையும் மோத வேண்டும்.  

6 /6

லீக் போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.