புதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!

Mercury Rise In Cancer Rasipalangal : கடக ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் புதன் பகவான் இன்று உதயமாகிறார். கிருஷ்ணர் பிறந்த ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியில் புதனின் உதயம் மிகவும் விசேஷமானது. 

மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், கடகத்தில் உச்சம் பெறுவது என்பது, ஜாதகத்தில் புதன் வலுப்பெற்றவர்களுக்கு வெற்றிவாய்ப்புகளை அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, சில ராசிகளுக்கு அருமையான எதிர்காலத்திற்கான அடித்தளத்தையும் அமைத்துத் தரும்...  

1 /8

கடக ராசியில் புதன் நான்கு நாட்களுக்கு முன்னதாகத் தான் பெயர்ச்சி அடைந்தார். இந்த பெயர்ச்சி நான்கு நாட்கள் முடிந்த பிறகு, இன்று புதன் உதயமாவது என்பது, புதனின் தாக்கம் கடகத்தில் வலுவாகியிருப்பதைக் குறிக்கிறது.  இந்த மாற்றம் ஜென்மாஷ்டமி நாளில் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெறுகிறது

2 /8

புதன் பெயர்ச்சியான ஜென்மாஷ்டமி நாளான இன்று முதல் அடுத்த புதன் பெயர்ச்சி வரை நான்கு ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தான். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து சேரும்

3 /8

கடக ராசியில் புதன் உதயத்தால், மிதுன ராசிக்காரர்களுக்கு லாபமானதாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும், திருமண வாழ்க்கை இனிக்கும், காதல் உறவுகள் மேலும் நெருக்கமாகும்.  குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். 

4 /8

கடக ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் என்றும் சொல்லும் அளவுக்கு புதனின் கடக ராசி உதயம் இருக்கும். புதனின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் கடக ராசியினரின் மூளை கூர்மையாக சிந்திக்கும் திறன் பெறும். இதனால், அவர்களின் சிந்தனையும், செயலும் ஒன்றாக செயல்பட்டு, பல நல்ல விஷயங்களை ஆக்கப்பூர்வமாக செய்து முடிக்கும்

5 /8

துலாம் ராசிக்காரர்களின் தொழிலில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் புதன் உதயம், செய்யும் முதலீட்டிக்ற்கும் நல்ல பலன்களைக் கொடுக்கும். செய்யும் வேலையில் வெற்றி நிச்சயம் என்று சொல்லலாம், குடும்பத்திலும் நிம்மதியான சூழல் நிலவும்  

6 /8

புதனின் கடக ராசி உதயம், சிம்ம ராசியினருக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். மனதை அலைக்கழித்து வந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் காலமாக இருக்கும். எனவே மனதில் அமைதியைக் கொடுக்கும் புதன் பகவான், வருமானத்திற்கான புதிய வழிகளையும் மனதில் தோன்ற வைத்து, எதிர்காலத்தை வளமாக்குவார்

7 /8

செயல்வீரர்களான விருச்சிக ராசியினரின் மனதில் நம்பிக்கையை ஊக்கப்படுத்தும் புதன் பகவானின் கடக உதயம், மனதில் பல புதிய சிந்தனைகளை உருவாக்கும். சிந்தனையை செயல்படுத்தும் சக்தியும் உதயமாகும். அனைவரின் பாராட்டுக்களையும் பெறும் விருச்சிக ராசியினருக்கு கடகத்தில் உதயமாகும் புதன் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது