ரொம்ப நாட்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்த விஜய் ஹீரோயின் - என்ன சொன்னார் தெரியுமா?

சினிமாவில் ரீ- என்ட்ரி ஆனது குறித்து நடிகை மீரா ஜாஸ்மின் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 

 

1 /5

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ‘ரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன் பிறகு ‘சண்டக்கோழி’, ‘ஆயுத எழுத்து’ உள்ளிட்டப் பல ஹிட் படங்களிலும் நடித்திருந்தார்.  

2 /5

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது மீண்டும் தமிழில் நடிக்க படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.   

3 /5

அந்த வகையில், தற்போது ‘விமானம்’, ‘டெஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ள அனுபவம் பற்றி அவர் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், "நீண்ட காலம் கழித்து இப்போது மறுபடியும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக உள்ளது.  

4 /5

’விமானம்’, ‘டெஸ்ட்’ ஆகிய படங்களின் கதை எனக்குப் பிடித்திருந்ததால் உடனே நடிக்க ஒத்துக் கொண்டேன். எந்த ஒரு படம் நடிக்க ஒத்துக் கொண்டாலும் அதில் கதை மற்றும் என் கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்று பார்த்துதான் தேர்ந்தெடுப்பேன்.   

5 /5

ரசிகர்கள் அதே அன்பையும், ஆதரவையும் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.