புத்தாண்டில் மந்திராலயம், ஷீரடி செல்ல IRCTC வழங்கும் சூப்பர் பேக்கேஜ்..!!!

ஆன்மீக இடங்களுக்கு சென்று குருவின் தரிசனத்துடன் நீங்கள் புதிய ஆண்டைத் தொடங்க விரும்பினால், ஐ.ஆர்.சி.டி.சி உங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.  உங்களுக்காக மிகவும் சிறந்த சலுகைகளைக் கொண்டு வந்துள்ளது. 

ஐ.ஆர்.சி.டி.சி குரு கிருபா யாத்ரா, GURU KRUPA YATHRA SZBD379A என்ற பெயரில் ஒரு டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுப்பயண சலுகை, சிறப்பு சுற்றுலா ரயிலாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 05.01.2021 மதியம் 12.05 மணிக்கு  புறப்படும். 6 நாள் மற்றும் ஐந்து இரவு கொண்ட சுற்றுப்பயணமாக இது இருக்கும்.

 

1 /5

இந்த சுற்றுப்பயண பேக்கேஜின் கீழ், பக்தர்கள் பண்டார்பூர் - ஷீர்டி மற்றும் மந்திராலயத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த ரயிலில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எக்மோர் ஆகிய இடங்களில் போர்ட் செய்யலாம்.  

2 /5

இந்த சலுகையுடன் கூடிய சுற்றூலா பயணத்திற்கு, 65 வயதுக்கு மேற்பட்ட நபருக்கும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளும்  முன்பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

3 /5

இந்த சுற்றுப்பயண பேக்கேஜிற்கான டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் மூலமாகவோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி, மண்டல அலுவலகங்கள் அல்லது பிராந்திய அலுவலகங்களின் எந்தவொரு சுற்றுலா வசதி மையத்திலோ பதிவு செய்யலாம். இந்த டூர் பேக்கேஜிற்கான கட்டணம் மிகவும் குறைவு. இந்த டூர் பேக்கேஜுக்கு ஒரு பயணிக்கான கட்டணம்  ரூ .5855.

4 /5

பயோமெட்ரிக் இலவச தரிசன வசதியும் பயணிகளுக்கு வழங்கப்படும், பயணிகள் வழியில் சில இடங்களை சுற்றி பார்க்கவும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.  

5 /5

COVID-19 க்கு இணங்க, பயணிகள் சுகாதார நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒரு பயணிக்கும் இன்னொரு பயணிக்கும் இடையிலான தூரம் குறைந்தது 6 அடி இருக்க வேண்டும். பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும். உங்கள் உடல்நிலையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், டூர் மேலாளரை அல்லது ஐ.ஆர்.சி.டி.சியைத் தொடர்பு கொள்ளுங்கள். பயணிகள் ஆரோக்யா செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.