IND vs AUS: இந்த கிரவுண்டிலா இந்தியா ஆஸ்திரேலியா போட்டி நடக்கிறது? அம்பலமான ஆடுகள ரகசியம்

IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி, மார்ச் 22 அன்று சென்னையில் MA சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது

  • Mar 21, 2023, 22:03 PM IST

இந்த போட்டியின் ஆடுகளம் குறித்து ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. தொடரின் இரண்டு ஆரம்பப் போட்டிகளிலும், ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை என்ற நிலையில் மூன்றாவது போட்டியின் தலைவிதியை நிர்ணயிக்கும் அப்டேட் இது

1 /5

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு உதவிகரமாக இருக்கும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே சமயம், பந்து வீச்சாளர்களுக்கும் உதவக்கூடிய புல்வெளி ஆடுகளத்தில் காணப்படும்.

2 /5

எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் அதிக ரன் அடித்த போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர். நாளை டாஸ் வென்ற பிறகு இங்கு முதலில் பந்துவீசுவது யார் என்பதில் வெற்றி தோல்வி அடங்கியுள்ளது

3 /5

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பையிலும், 2வது போட்டி விசாகப்பட்டினத்திலும் நடந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் எந்த அணியும் 200 ரன்களை தொட முடியவில்லை. தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அதே நேரத்தில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

4 /5

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 22 அன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் 'செய் அல்லது செத்துமடி' என்ற போட்டியாக அமையும். தொடரை வெல்ல இரு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி இருக்கிறது

5 /5

ஐபிஎல் 2023 டிராபி, நாளை சென்னையில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது