செரிமான கோளாறு சரியாக..சாப்பிட்டவுடன் ‘இதை’ குடியுங்கள்!

Tips To Improve Digestion: பலர், உணவு சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகாமல் சிரமப்படுவர். அவர்கள், உணவு சாப்பிட்டவுடன் சில பானங்களை குடித்தால் செரிமான கோளாறு சரியாகும். 

Tips To Improve Digestion In Tamil: இந்திய கலாச்சாரத்தில் பல வகையான உணவுகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அதிக மசாலாவை உபயோகப்படுத்தும் உணவுகளாக இருக்கும். இதனால், சமயங்களீல் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாமல் போகலாம். அதை தவிர்க்க சில பானங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

1 /7

இந்தியாவில் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்கள் பல உள்ளன. இதில், பெரும்பாலானவை பல மசாலாக்களை சேர்த்தவையாக இருக்கும். இந்த உணவு பழக்கங்களால் உடலுக்கு பல வகையான நன்மைகள் ஏற்பட்டாலும், செரிமான கோளாறு போன்ற உடல் நலக்கோளாறுகளும் ஏற்படுகின்றன. 

2 /7

செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கு பல பானங்கள் உதவுகின்றன இந்த பானங்களை நாமே வீட்டில் தயாரிக்கலாம். இதனால் நாம் பெரும் பயன்களும் ஏராளம். அவை என்னென்ன பானங்கள் தெரியுமா?

3 /7

சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்தோ இந்த பானத்தை தயாரிக்கலாம். இந்த பானம் உணவுக்குப் பிறகு அருந்த சிறந்தது. சீரகத்தண்ணீர், திறம்பட நாம் சாப்பிட்ட உணவு ஜீரணிக்க உதவுகிறது. 

4 /7

இஞ்சி டீ நறுமணம் மற்றும் காரம் நிறைந்ததாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானம் ஆவதற்கு உதவுகிறதும். மேலும், இந்த பானம் அஜீரணம் மற்றும் குமட்டலை நீக்குகிறது.

5 /7

மோரில், ப்ரோபயட்டிக் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதை குடிப்பதை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பின்பற்றி வருகின்றனர். இதை சாப்பிட்டவுடன் அருந்துவதால் அசிடிட்டி (அமிலத்தன்மை) குறையும். இதனால் சாப்பிட்ட உணவு சீக்கிரமாகவே சரியாகும். உடலும் வலுபெறும். 

6 /7

ஆயுர்வேதத்தின் படி, நெல்லிக்காய் அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்தாக பார்க்கப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த, நெல்லிக்காய் சாறு ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவி புரிகிறது. செரிமானத்தையும் எளிதாக்குகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு புத்துணர்ச்சியூட்டவும் செய்கிறது. 

7 /7

துளசி மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு அற்புதமான மூலிகையாகும். துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். இதனால், சளி-இருமல் சரியாகும், செரிமான கோளாறுகளும் ஏற்படாமல் தடுக்கலாம். மேலும், துளசி தேநீரை குடிப்பதால் மனதும் ரிலாக்ஸாகும்.