சுக்கிரன் - புதன் இணைவினால் பம்பர் பலன்களை பெறும் ‘4’ ராசிகள்!

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி, கிரகங்களின் இணைவு மற்றும் கிரகங்களின் நிலை மாற்றம் ஆகியவை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கிரகங்களின் இந்த நிலைகளின் அடிப்படையில், கணிப்புகள் செய்யப்படுகின்றன. சுக்கிரன் சஞ்சாரம் மற்றும் புதன் சஞ்சாரம் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு சுப பலன் தரும். புதன் - சுக்கிரன் பெயர்ச்சியினால், 2022 நவம்பர் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பொற்காலமாக இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம். 

1 /5

ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல முக்கியமான கிரகங்கள் நவம்பர் மாதத்தில் சஞ்சரிக்கப் போகின்றன. இதில் 3 நாட்களில் 2 கிரகப் பெயர்ச்சிகள் நடக்கின்றன. நவம்பர் இரண்டாம் வாரத்தில், 11ம் தேதி, சுக்கிரன் கிரகம் ராசி மாறுகிறது. அதே நேரத்தில், நவம்பர் 13 ஆம் தேதி, புதன் கிரகமும் ராசி மாறுகிறது. இந்த வகையில் நவம்பர் 11-ம் தேதி விருச்சிக ராசியில் சுக்கிரனும், நவம்பர் 13-ம் தேதி புதன் விருச்சிக ராசியிலும் சஞ்சரிக்க உள்ளனர். 

2 /5

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன், புதன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படும். திருமணம் செய்ய விரும்புவோருக்கு இதுவே சிறந்த நேரம். இது தவிர, இந்த பெயர்ச்சி காலம் தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். முன்னேற்றம் உண்டாகும், பண ஆதாயம் உண்டாகும்.

3 /5

சிம்மம்: புதன், சுக்கிரனின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும்  கொண்டு தரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. நிலம் மூலம் லாபம் உண்டாகும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பணம் கிடைக்கும்.

4 /5

மகரம்: நவம்பரில் நடக்கும் சுக்கிரன் சஞ்சாரம் மற்றும் புதன் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் உயரும். வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். நிறைவேறாத ஆசை நிறைவேறும். பணியிடத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

5 /5

கும்பம்: சுக்கிரன் மற்றும் புதன் ராசியில் ஏற்படும் மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரிய பலன்களைத் தரும். புதிய வேலை கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு பெறலாம். எதிர்காலத்தை சீர்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கும் என்று சொல்லலாம். நீங்கள் ஒரு புதிய வீடு-கார் அல்லது ஏதேனும் விலையுயர்ந்த பொருளை வாங்கலாம். வாழ்வில் வசதிகள் பெருகும். (துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)