20 ஓவர் உலக கோப்பை விளையாட விரும்பும் டிகே! ரோகித் கையில் முடிவு

20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 

1 /6

ஆர்சிபி அணியில் இடம்பிடித்திருக்கும் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மிக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்டம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை ஈர்த்திருக்கிறது.  

2 /6

மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் உட்சகட்ட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தினேஷ் கார்த்திக். இதனை நேரில் பார்த்த ரோகித் சர்மா, அவரை இந்திய அணியில் சேர்க்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.  

3 /6

பேட்டி ஒன்றில் பேசும்போது, தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் விரும்பினால் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறினார்.  

4 /6

அவரின் இந்த பேட்டிக்கு பதில் அளித்துள்ள தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார். இதே ஆட்டத்தை இந்திய அணிக்கு வெளிப்படுத்தவும் தயாராக இருப்பதாக கூறியுள்ள அவர், அது குறித்து ரோகித், டிராவிட், அஜித் அகர்கர் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

5 /6

அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் தனக்கு மகிழ்ச்சியே என கூறியிருக்கும் தினேஷ் கார்த்திக், ஒருவேளை 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தால், தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த தயாராகவே இருப்பதாக கூறியுள்ளார்.  

6 /6

இந்த வாய்ப்பை நிச்சயம் தவறவிடமாட்டேன் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அவரின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்.