பேருந்துகளில் கலாட்டா செய்யும் மாணவர்கள் - நடவடிக்கை எடுக்குமா அரசு

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. 

  • Mar 14, 2022, 17:03 PM IST

மாணவர்களுக்கு நேரடியாகவும், பள்ளிகளுக்கு நேரில் சென்று கலந்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரை கூறிய பிறகும், சில மாணவர்கள் தொடர்ந்து கலாட்டா செய்து வருவதாக புகார்.

1 /5

"பஸ் டே" (Bus Day in Tamil Nadu) என்ற பெயரில் பேருந்து மீது ஏறி ஆடுவதும், சில சோகச் சம்பவங்கள் அரங்கேறுவதும் வாடிக்கை.

2 /5

சென்னை புரசைவாக்கத்தில் 29A வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்து மீது ஏறி அட்டகாசம் செய்துள்ளனர். 

3 /5

மாணவர்கள் தினமும் பேருந்துகளில் உள்ளே வந்து பயணம் செய்யாமல் படிகள் மற்றும் ஜன்னல் கம்பிகளில் தொங்கிக்கொண்டும் பயணம் செய்கின்றனர். 

4 /5

பேருந்துகளில் பயணிக்கும் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் மாணவர்கள் நடந்து கொள்கின்றனர்.

5 /5

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.