கடவுளை நேரடியாக அடைவதற்கான நேரடி வழி! இது குறுக்குவழி அல்ல... காயத்ரி மந்திரம்...

Reciting Gayatri Mantra: காயத்ரி மந்திரத்தை மகாமந்திரம் என்று அழைப்பதற்கான காரணம் தீவிர ஆன்மீகத்தில் இல்லாதவங்களும் மனதில் அமைதியையும் இறைவனை சுலபமாக நெருங்குவதற்காகவும் தான்... 

நல்வாழ்க்கை, ஆரோக்கியம், வெற்றி, அதிர்ஷடம் தரும் மந்திரங்களில் முதலிடத்தில் இருக்கும் காயத்ரி மந்திரம்... வாழ்க்கையை முறைப்படுத்தும் அற்புதமான தந்திரம்...

1 /8

காயத்ரி மந்திரத்தின் மகிமைகளை வார்த்தைகளுக்கும் அடக்கிவிட முடியாது. மந்த்ர ராஜம் என்றும், வேத மாதா என்று அழைக்கப்படுவது காயத்ரி மந்திரத்தின் சிறப்பாகும்...

2 /8

மந்திரங்களின் தலையாய மந்திரமான காயத்ரி மந்திரம் ஜபித்தால் என்ன பலன்கள் ஏற்படும்?  ‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’ என்று சொல்வதுண்டு... அதாவது தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி மந்திரம் என்பது இந்த வார்த்தையின் பொருளாகும்.  

3 /8

ஓம் பூர்புவஸ் ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி... தியோ யோன: ப்ரசோதயாத்!

4 /8

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? ஓம் பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின்    பர்கோ –  தெய்வீகப் பேரொளி மீது தீ மஹி – நாம் தியானிக்கின்றோம் தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம் நஹ – நம் தியோ – அறிவுக்கு ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்

5 /8

அறிவையும் ஆற்றலையும் தரும் காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி. எல்லா நோய்களையும் போக்க வல்லது. 

6 /8

சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி! அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி. அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி மந்திர ஜபம்

7 /8

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது சுற்றுச்சூழலில் நேர்மறை ஆற்றலை கொடுக்கிறது. மேலும் எதிர்மறை ஆற்றலை அகற்றி வாழ்க்கை வளம் பெற காயத்ரி மந்திரம் உதவுகிறது.

8 /8

விசுவாமித்திரரால் அருளப்பட்ட காயத்ரி மந்திரம் வேத மந்திரங்களின் சாரமாக விளங்குகிறது. அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி காயத்ரி மந்திரங்கள் உண்டு