இந்த ராசிகளுக்கு பம்பர் பண வரவு: மகாலட்சுமி யோகம் ஆரம்பம்

செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் மற்றும் புத்திசாலித்தனம், செல்வம், வியாபாரம் ஆகியவற்றின் காரணியான புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை சிலருக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த கிரகங்களின் சேர்க்கை மகாலட்சுமி யோகத்தை உண்டாக்குகிறது. ஜோதிடத்தில் மகாலக்ஷ்மி யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும். எனினும் 3 ராசிக்காரர்களுக்கு இது மிக சிறப்பாக இருக்கும். 

1 /4

ஜோதிடத்தில் மகாலக்ஷ்மி யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருக்கும். எனினும் 3 ராசிக்காரர்களுக்கு இது மிக சிறப்பாக இருக்கும். இந்த மஹாலக்ஷ்மி யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அளிக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.  

2 /4

மேஷ ராசிக்காரர்களுக்கு மகாலக்ஷ்மி யோகத்தின் உருவாக்கம் வரப்பிரசாதமாக அமையும். திடீர் பண ஆதாயத்தைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் அபாயகரமான முதலீடுகளும் உங்களுக்கு பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் அதிகமாகும். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும். மொத்தத்தில், இந்த நேரம் மேஷ ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும்.  

3 /4

கடக ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி யோகம் சுப பலன்களைத் தரும். சிலருக்கு வேலையில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம் நல்ல பலன்களை அளிக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாபாரிகள் லாபம் அடைவார்கள். 

4 /4

புதன்-சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் மகாலக்ஷ்மி யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலனைத் தரும். பணியிடத்தில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். பல நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். பண ஆதாயத்தின் இந்த சூழ்நிலை உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த நேரம் நன்றாக இருக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)