29 பழங்காலப் பொருட்களை இந்தியாவிடம் திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற  29 பழங்காலப் பொருட்களை ஆஸ்திரேலியா திருப்பிக் கொடுத்துள்ளது. இந்த தொன்மை வாய்ந்த கலைப் படைப்புகளை ஆறு வகையாக பிரித்துள்ளனர்.  

1 /5

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த கலைப்பொருட்கள் இந்தியாவுக்கு திரும்பிக் கிடைத்தன.  

2 /5

ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பிய பழங்கால பொருட்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

3 /5

இந்த பழங்கால பொருட்கள் வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவை. பழமையானவை கிபி 9-10 நூற்றாண்டுகளுக்கு முந்தையவை.

4 /5

இந்த பழங்கால பொருட்களில் சிவன் மற்றும் நாயன்மார்கள், ஜெயின் பாரம்பரியம், சக்தி வழிபாடு, விஷ்ணு மற்றும் அவரது வடிவங்கள், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் ஆகியவை அடங்கும்

5 /5

இந்த பழம்பொருட்கள் மணற்கல், பளிங்கு, வெண்கலம், பித்தளை, காகிதம் போன்ற பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.